முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவதூறு வழக்கு: ராகுலுக்கு ஜாமீன் வழங்கியது மும்பை நீதிமன்றம்

வியாழக்கிழமை, 4 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

மும்பை : அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையை ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வுடன் ஒப்பிட்டு பேசியதாக ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் மீது மும்பை நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் திருதிமான் ஜோஷி கடந்த 2017-ல் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, ராகுல் காந்தி, யெச்சூரி ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இருவர் தரப்பிலும் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஜாமீன் மனுவை பரிசீலித்த நீதிபதி, ராகுல் காந்தியை ரூ.15 ஆயிரம் உத்தரவாதத்துடன் ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார். இதையடுத்து முன்னாள் எம்.பி. ஏக்நாத் கெய்க்வாட் ராகுல் காந்திக்காக உத்தரவாதம் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து