முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலையை ஆய்வு செய்ய சென்ற அதிகாரி மீது சகதியை ஊற்றிய காங். எம்.எல்.ஏ.

வியாழக்கிழமை, 4 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

மும்பை : மராட்டியத்தில் சாலையை ஆய்வு செய்ய சென்ற அதிகாரியின் மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ. நிதிஷ் ரானே சகதியை ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலம் கங்காவேலி பாலம் அருகே மும்பை -கோவா சாலையில் உள்ள பள்ளங்களை ஆய்வு செய்வதற்காக நெடுஞ்சாலைத் துறையின் பொறியாளர் பிரகாஷ் சேதேகா சென்றுள்ளார். அப்போது அவருடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ. நிதிஷ் ரானே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடைய ஆதரவாளர்களும் மோதல் போக்கை மேற்கொண்டுள்ளனர். அப்போது அங்கே ஏற்கனவே பக்கெட்களில் தயாராக வைக்கப்பட்டிருந்த சகதி நீர் எடுத்து வரப்பட்டு அதிகாரியின் மீது ஊற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிகாரியை அவர்கள் பாலத்தில் கட்டி வைக்கவும் முயற்சி செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது. நிதிஷ் ரானே முன்னாள் மராட்டிய முதல்வர் நாராயண் ரானேவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து