முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

524 டாக்டர்களுக்கு இன்று நியமன ஆணை இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். வழங்குகிறார்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

வியாழக்கிழமை, 4 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் இன்று நடைபெறும் விழாவில் முதல்வரும், துணை முதல்வரும் பங்கேற்று 524 டாக்டர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தில் திருவள்ளூர் தொகுதி உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன், டெங்கு ஆரம்பித்த இடம் திருவள்ளூர் தான். அங்கு அதிகளவில் நோய் தொற்றுகள் ஏற்படும் சூழல்இருக்கிறது. எனவே புதுமாவிலங்கையில் ஆரம்ப சுகாதார நிலையமும், சுற்றியுள்ள கிராமப்புற பகுதி மக்களுக்காக 108 ஆம்புலன்ஸ் சேவையும்ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்து பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டெங்கு நோயைநாங்கள் முடித்து வைத்த இடம் திருவள்ளூர் தான் . தமிழகத்தில் கடந்த ஆண்டு 12 ஆரம்ப சுகாதார நிலையங்களும், கடந்த 8 ஆண்டுகளில் 254 சுகாதார நிலையங்களும் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

கிராமப்புறத்தில் சுகாதார சேவையை உறுதிப்படுத்திய முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. சென்னையில் 524 டாக்டர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வமும் பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்கள். இதன்மூலம் பொது சுகாதாரத்துறையில் நாளை ( இன்று) 524 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதன் மூலம் காலிப்பணியிடமே இல்லாத துறையாக திகழும். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து