முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எங்கள் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற எண்ணமே உள்ளது: அமெரிக்கா மீது வடகொரியா குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

எங்கள் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற எண்ணமே அமெரிக்காவிடம் உள்ளது என்று வடகொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் முறையாக சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசினர். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் இருநாட்டு தலைவர்களும் மீண்டும் சந்தித்து பேசினர். மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இந்த சந்திப்புகள் தோல்வியிலேயே முடிந்தது. இந்த சூழலில் அரசு முறை பயணமாக தென்கொரியா சென்ற டிரம்ப், கொரிய நாடுகளின் எல்லையில் கிம் ஜாங் அன்னை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் அணு ஆயுத பயன்பாடு குறித்த பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க இருதரப்பிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்கா, பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டாலும் அந்நாடு விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கத்துடன் இருப்பதாக வடகொரியா குற்றச்சாட்டை சுமத்தி உள்ளது. இது குறித்து ஐ.நா. சபைக்கான வடகொரியா தூதர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறப்பட்டிருப்பதாவது:-

சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய இறக்குமதி குறித்து 2017-ம் ஆண்டு எட்டப்பட்ட முடிவை வடகொரியா மீறியதாக, அமெரிக்கா குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. இதை காரணம் காட்டி வடகொரியா மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்க கேட்டு அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் கூட்டாக ஐ.நா.வின் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் எழுதி இருக்கிறது. கிம் ஜாங் அன் உடனான சந்திப்புக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், அழைப்பு விடுத்திருந்த அதே நாளில் இந்த நாடுகள் கூட்டாக எழுதிய கடிதமும் வெளியாகி இருக்கும் உண்மையை கவனிக்க வேண்டும். இதன் மூலம் வட கொரியாவுடன் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கத்தோடு தான் அமெரிக்கா இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.  பிரச்சினைக்கு தீர்வுகாண்பதை காட்டிலும் பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும் என்கிற எண்ணமே அமெரிக்காவுக்கு அதிகமாக இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து