முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துனிசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 80-க்கும் மேற்பட்ட அகதிகள் பலி?

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

துனிசியா நாட்டில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 80-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என என அஞ்சப்படுகிறது.

ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த அகதிகள் சிலர் லிபியாவில் இருந்து ஐரோப்பாவை நோக்கி படகில் பயணம் செய்து உள்ளனர். அந்த படகில் 80-க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். துனிசியா கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த போது படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அதிக எடையால் படகு திடீரென கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனை கவனித்த மீனவர்கள் சிலர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

நீரில் மூழ்கியவர்களில் 4 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். எனினும் அவர்களில் ஒருவர் உயிரிழந்து விட்டார். இந்த விபத்தில் 80-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி பலியாகி இருக்கக் கூடும் என ஐநா அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து