முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தித் தர அரசு தயார்: சட்டசபையில் முதல்வர் எடப்பாடி உறுதி

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையும் உயர்த்தித் தரப்படும் என்றும் நுகர்வோர்களுக்கான பால் விலையை உயர்த்தினால் சங்கங்கள் நஷ்டமில்லாமல் செயல்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தமிழக சட்ட பேரவையில், தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி பேசிய போது, பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த விளக்கம் வருமாறு:-

நான்கு ஆண்டு காலமாக பால் உற்பத்தியாளர்களுக்கு பால் விலை உயர்த்தப்படவில்லை என்ற ஒரு வினாவை உறுப்பினர் எழுப்பி இருக்கின்றார். நாங்கள் பால் விலையை உயர்த்துவதற்கு தயாராக இருக்கின்றோம். ஆனால் நீங்கள் போராட்டம் செய்யாமல் இருந்தால், நாங்கள் பால் விலையை நிச்சயமாக உயர்த்துவோம். உற்பத்தியாளர்களுக்கு உயர்த்தும் போது, நுகர்வோருக்கும் உயர்த்தி தானே ஆக வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு அந்த விலையை உயர்த்தி கொடுக்கின்ற போது, அதற்கேற்றவாறு நுகர்வோருக்கு கட்டணம் உயரும். இது உங்களுடைய ஆட்சியிலும் சரி, எங்களுடைய ஆட்சியிலும் சரி, அப்போது தான் இந்த நிர்வாகம் சிறப்பாக நடக்கும். இப்போதே நிர்வாகம் நஷ்டத்தில் தான் இயங்கி கொண்டிருக்கிறது.

இப்பொழுது நுகர்வோருக்கு வழங்கப்படுகின்ற கட்டணத்திலும், உற்பத்தியாளர்களுக்கு வழங்குகின்ற கட்டணத்திலும் வித்தியாசம் இருக்கின்றது. இப்போது பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கின்றன. ஆகவே, இது அரசுனுடைய கவனத்திற்கு ஏற்கனவே விவசாய சங்கங்கள், பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் எல்லாம் கொண்டு வந்திருக்கின்றது. அதை பரிசீலித்து கொண்டுதான் இருக்கின்றோம். ஆகவே, பால் உற்பத்தியாளர்களுக்கு விலை உயர்த்தி கொடுப்பதில் எந்தவித ஒரு கஷ்டமும் அரசுக்கு இல்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் எல்லாம் இதை வைத்து கொண்டு அரசியல் செய்வார்கள். ஏனென்றால் நுகர்வோருக்கு விலை உயர்த்த வேண்டும். நுகர்வோருக்கு விலை உயர்த்துகின்ற போது, பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். அப்படி ஒரு கோரிக்கை எதிர்க்கட்சியிலிருந்து வரும். ஆகவே, நீங்களும் இதற்கு சம்மதித்தால் பால் உற்பத்தியாளர்களுக்கு உயர்த்த வேண்டிய தொகையை அரசு நிச்சயமாக உயர்த்தும்.

சட்டமன்ற கூட்டத் தொடர் முடிந்ததுமே பால் உற்பத்தியாளர்களுக்கு விலை உயர்த்தி கொடுக்கப்படும். அதே போல, நுகர்வோருக்கு வழங்கப்படுகின்ற பாலினுடைய விலையும் உயர்த்தி கொடுத்தால் தான் சங்கம் சிறப்பாக செயல்படும். ஏனென்றால் பல லட்சம் பேர் பால் உற்பத்தியில் ஈடுபட்டு இருக்கின்றார்கள். கால்நடைகளுக்கு வழங்க வேண்டிய உணவுப் பொருள், தவிடு, புண்ணாக்கு, பருத்திக் கொட்டை ஆகிய கால்நடை தீவனங்களின் விலை எல்லாம் உயர்ந்து விட்டதன் காரணத்தினாலே அவர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றார்கள். ஆகவே, அவர்களுடைய கோரிக்கைகள் அரசினுடைய பரிசீலினையில் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. உறுப்பினர் சக்கரபாணி சொன்னதை போல, இன்றைக்கு அவருடைய நிலையை கருதி, அரசு பால் உற்பத்தியாளர்களுக்கு விலை உயர்த்தும். அதே போல, நுகர்வோர்களுக்கு வழங்கப்படுகின்ற அந்த பாலினுடைய விலையும் உயர்த்தி, யாருக்கும் நஷ்டமில்லாமல் சிறப்பாக கூட்டுறவு சங்கங்கள் நடைபெற வேண்டும். அதே போல பொதுமக்களும் பாதிக்கப்படாத அளவிற்கு அரசு செயல்படும். நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து