முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானாவில் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை: அமித்ஷா தொடங்கி வைத்தார்

சனிக்கிழமை, 6 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

ஐதராபாத் : பா.ஜ.க. நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு, தெலுங்கானாவில் கட்சி உறுப்பினர் சேர்க்கையை பா.ஜ.க. தலைவரும் உள்துறை மந்திரியுமான அமித்ஷா நேற்று தொடங்கி வைத்தார்.

பா.ஜ.க. நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதிலும் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கையையை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டு, அதற்காக முகாம்களும் நடத்தப்பட்டன. இதில் அந்தந்த பகுதி பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு, உறுப்பினர் சேர்க்கையை முன்னின்று நடத்தினர். 

வாரணாசியில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். மேலும், வாரணாசியில் மரக்கன்று நடும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கையை அக்கட்சியின் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார். இதற்காக ரெங்காரெட்டி மாவட்டம் சென்ற அமித்ஷா, அங்குள்ள பழங்குடியின பெண் வீட்டுக்கு சென்று மதிய உணவருந்தினார். அவருடன் முரளிதர் ராவ் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் உடன் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து