Idhayam Matrimony

எனக்கு ஏதாவது நடந்தால் ஆந்திரா பற்றி எரியும் - சந்திரபாபு நாயுடு சொல்கிறார்

சனிக்கிழமை, 6 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

அமராவாதி : தனக்கு ஏதாவது நடந்தால் ஆந்திரா பற்றி எரியும் என ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடுவுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு வசதிகளை குறைத்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு,

இது மிகவும் துரதிஷ்டமான சூழல். எனது உயிருக்கு இருக்கும் ஆபத்தை வைத்து ஆளும் கட்சி விளையாடுகிறது. எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என தெரிந்தும் அரசு பாதுகாப்பை குறைத்துள்ளது. எனக்கு ஏதாவது நடந்தால் ஆந்திரா பற்றி எரியும் என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ஆளும் கட்சியினர் தாக்கியதால் பெண் சமூக ஆர்வலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி வாய் திறக்க முதல்வர் மறுக்கிறார். கண்டனம் தெரிவிக்க கூட அவருக்கு வார்த்தை இல்லை எனவும் ஜெகன் மோகன் ரெட்டியை அவர் விமர்சித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து