முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தண்ணீரை வீணாக்குவதை நிறுத்த வேண்டும். வாரணாசியில் மோடி பேச்சு

சனிக்கிழமை, 6 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

வாரணாசி : தண்ணீரை வீணாக்குவதை நிறுத்த வேண்டும் என்று  வாரணாசியில் பிரதமர் மோடி பேசினார்.

நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு பிரதமர் மோடி வெற்றி பெற்றார். தேர்தலில் அதிக இடங்களை பா.ஜ.க. கைப்பற்றி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து 2-வது முறையாக மீண்டும் மோடி பிரதமரானார்.

இந்நிலையில், பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை திட்ட தொடக்கத்திற்காக வாரணாசி தொகுதிக்கு நேற்று  பிரதமர் மோடி வருகை தந்தார். அவரை வாரணாசி விமான நிலையத்தில் அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா, உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் மாநில தலைவர் எம்.என். பாண்டே ஆகியோர் வரவேற்றனர்.

வாரணாசி விமான நிலையத்தில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் சிலை திறப்பும் நடைபெற்றது. இதற்காக வருகை தந்த சாஸ்திரியின் மகன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அனில் சாஸ்திரி பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்றார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி வாரணாசி விமான நிலையத்தில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சாஸ்திரியின் இளைய மகன் மற்றும் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுனில் சாஸ்திரியும் கலந்து கொண்டார்.

இதன்பின் மரம் நடு விழாவையும் பிரதமர் மோடி வாரணாசியில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பா.ஜ.க.வுக்கு உறுப்பினர் சேர்க்கைக்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

பின்னர் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-

தண்ணீர் கிடைப்பதை விட, தண்ணீரை வீணாக்குவதும் கவனக்குறைவாகப் பயன்படுத்துவதும் பெரிய பிரச்சினைகள். எனவே வீடுகளில் அல்லது நீர்ப்பாசனத்திற்காக பயன்படுத்தப்பட்டாலும், தண்ணீரை வீணாக்குவதை நிறுத்த வேண்டும்.

பட்ஜெட்டில், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய நாங்கள் வழிகாட்டியுள்ளோம். அது தொடர்பான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வரவிருக்கும் 10 வருடங்கள் என்ற தொலைநோக்குடன் நாங்கள் களத்தில் இறங்கியுள்ளோம் அடுத்த 5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவோம்.

5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தின் இலக்கை நாங்கள் அடைவோம் என்று நான் நம்புகிறேன், ஆனால் சிலர் இதன் தேவை என்ன என்று கேட்கிறார்கள், அது ஏன் செய்யப்படுகிறது? என கேட்கிறார்கள். இவர்கள் தொழில்முறை அவநம்பிக்கையாளர்கள் என பிரதமர் மோடி கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து