எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : எம்.பி.பி.எஸ்., பிடி.எஸ் ரேங்க் பட்டியல் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. இதில் திருவள்ளூரை சேர்ந்த ஸ்ருதி என்ற மாணவி நீட்தேர்வில் 685 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இதே போல் ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த அஸ்வின்ராஜ், கோயம்புத்தூர் கணபதியை சேர்ந்த இளமதி, சிவமோனிஷ் குமார்,( திருநெல்வேலி) சென்னையை சேர்ந்த அன்புவண்ணன், ஸ்ரீகாந்த், தானியா, பிரியங்காரெட்டி, கோவசக்திமீனாள் , பெங்களுரை சேர்ந்த ஷாலினி ஜெயராமன் ஆகிய மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டுக்கான இடத்தில் முதலிடங்களை பெற்றுள்ளனர்.
தரவரிசை பட்டியலை வெளியிட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மாணவர் சேர்க்கையிடங்களுக்கு பொதுப்பிரிவில் ஆன்லைன் மூலம் 39 ஆயிரத்து 13 மாணவர்கள் விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர். இதில் 31 ஆயிரத்து 353 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 11 ஆயிரத்து 741 மாணவர்களும் 19 ஆயிரத்து 612 மாணவியர்களின் விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டுள்ளன. இதில் 5 சதவீத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இடங்களுக்கு 74 பேரும், விளையாட்டு வீரர்களுக்குரிய இடங்களுக்கு 285 மாணவர்களும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளில் 691 பேரும் விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர். இவர்களில் மாநிலப் பாடத்தில் படித்த மொத்த மாணவர்களிந் 23 ஆயிரத்து 291 பேர், சி.பி.எஸ்.இ மூலம் படித்தவர்கள், 9841 பேர், பழைய. மாணவர்கள் 17 , 618 பேர், சுயநிதி மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளிலுள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் தனி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 25 ஆயிரத்து 651 மாணவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இதில் 9 ஆயிரத்து 366 பேர் மாணவர்கள், 16 ஆயிரத்து 285 பேர் மாணவிகள், இவர்களில் பழைய மாணவர்கள் 14 ஆயிரத்து 387 பேர். இம்மாணவர்களில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் படித்த கடப்பாவை சேர்ந்த மாணவர் ஷோடம் ஸ்ரீநந்தன்ரெட்டி என்ற மாணவர் 685 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தில் வந்துள்ளார். மற்ற மாணவர்களும் பெரும்பாலோர் வெளிமாநில மாணவர்களே .
எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் கவுன்சிலிங் வரும் 9-ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கும். முதல் நாளில் சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெறும், என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் செல்வராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது, தமிழ்நாட்டில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3250 மாணவர் சேர்க்கையிடங்களும் சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 150 இடங்களும் சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ கல்லூரியில் 100 இடங்களும் பெருந்துறையில் போக்குவரத்துக் கழகத்தின் கல்லூரியில் 100 இடங்களும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையில்லாத 13 மருத்துவக் கல்லூரிகளில் 1800 என்று மொத்தம் 5400 எம்.பி.பி.எஸ் சீட்டுக்கள் உள்ளன. இதில் 580 மாணவர் சேர்க்கையிடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும் 852 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு போக மீதியுள்ள 3 ஆயிரத்து 968 மாணவர் சேர்க்கையிடங்கள் கவுன்சிலிங்குக்கு ஒப்படைக்கப்படும். சென்னையில் உள்ள ஒரு அரசு பல்மருத்துவக் கல்லூரியில் நூறு இடங்களில் 15 மாணவர் சேர்க்கையிடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும். மீதியுள்ள 85 இடங்கள் கவுன்சிலிங்கில் ஒப்படைக்கப்படும். இதே சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியின் 80 இடங்களில் 12 அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் 68 இடங்கள் கவுன்சிலிங்குக்கு வழங்கப்படும். 17 சிறுபான்மை மற்றும் சிறுபான்மையல்லாத கல்லூரிகளின் 1760 மருத்துவ மாணவர் சேர்க்கையிடங்களில் ஆயிரத்து 70 இடங்கள் கவுன்சிலிங்கில் வரும் 690 மேனேஜ்மெண்ட் கோட்டாவில் நிரப்பப்படும். மொத்தமுள்ள 1940 மாணவர் சேர்க்கையிடங்களில் 1, 213 இடங்கள் கவுன்சிலிங்கில் ஒப்படைக்கப்படும். மொத்தமுள்ள 5400 எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையிடங்களில் 3 ஆயிரத்து 968 இடங்களும் 1940 பி.டி.எஸ் இடங்களில் 1213 இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும் என்று டாக்டர் செல்வராஜன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ
-
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024சென்னை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு: ஆம் ஆத்மி
27 Mar 2024புதுடெல்லி, 7 நாட்களாக சிறையில் உள்ள நிலையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.
-
உ.பி. மீரட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
27 Mar 2024லக்னோ, உ.பி. மீரட்டில் இருந்து தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்குகிறார்.
-
மகாராஷ்டிரா மாநிலத்தில் இடைத்தேர்தல் நிறுத்தம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024மும்பை, மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கடும் தோல்வியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
27 Mar 2024சென்னை, குறுக்கு வழிகளில் செயல்படும் தி.மு.க பாராளுமன்றத் தேர்தலில் கடும் தோல்வியை சந்திக்கும் என்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
27 Mar 2024சென்னை, பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை, ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.