எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் அளித்த ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தடை விதித்து உத்தரவிட்டது.
கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் -ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அரசு நடந்து வருகிறது. இந்த கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்தே அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து அச்சுறுத்தலாகவே இருந்து வந்தனர். அவர்களை கட்சித் தலைமை சமாதானம் செய்து வந்தது. இருப்பினும் ஆட்சியை கவிழ்ப்பதில் அவர்கள் தீவிரமாக இருந்தனர். ஆளும் கூட்டணி கட்சிகளில் இருந்து 16 எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் கூட்டணி அரசு கடும் நெருக்கடியில் உள்ளது. ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் அங்கீகரித்தால், இந்த கூட்டணி அரசு தானாகவே கவிழ்ந்து விடும்.
இதனிடையே அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ராஜினாமா விஷயத்தில் சபாநாயகரை முடிவு எடுக்கும்படி அறிவுறுத்தியது. அத்துடன் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சபாநாயகரை சந்திக்கும்படி அறிவுறுத்தியது. அதன்படி அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நேற்று முன்தினம் சபாநாயகரை சந்தித்தனர். ஆனால், சபாநாயகரோ ராஜினாமா கடிதங்களை உடனடியாக ஏற்க முடியாது என திட்டவட்டமாக கூறி விட்டார். முழுமையாக விசாரணை நடத்தி அந்த விசாரணையின் அடிப்படையில்தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்தார். சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிராக சபாநாயகர் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் தன்னையும் இணைக்கும்படி கர்நாடக இளைஞர் காங்கிரஸ் தலைவர் அனில் சாக்கோ ஜோசப் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வழக்குடன் சேர்த்து விசாரிப்பதாக கூறினர். இதே போல் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டுள்ளனர். அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், கர்நாடகா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் மனுக்களை விசாரிக்கக் கூடாது என கூறியுள்ளனர்.
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனால் தார்மீக அடிப்படையில் இதுபோன்ற வழக்குகளை விசாரிக்காமல் இருக்கலாம். மக்களின் கருத்தை கேட்காமல் ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ.க்களை ஊக்குவிக்கும் வகையில் இதுபோன்ற மனுக்களை விசாரிக்க கூடாது என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த பரப்பான சூழ்நிலையில், கர்நாடக விவகாரம் தொடர்பான இந்த வழக்குகள் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கியும், சபாநாயகர் தரப்பில் அபிஷேக் சிங்வியும் வாதாடினர். இரு தரப்பினருக்குமிடையே காரசாரமான வாதம் நடைபெற்றது. அரசியலமைப்பு சட்ட விதிகள் பற்றி விளக்கி கூறிய அபிஷேக் சிங்வி, அரசியலமைப்பு பதவியை சபாநாயகர் வகிப்பதாக கூறினார். சபாநாயகர் சட்டமன்றத்தின் மிக மூத்த உறுப்பினர், அவருக்கு அரசியலமைப்பு சட்டம் தெரியும். அவரை இழிவுபடுத்தும் வகையில் இதுபோன்று வழக்கு தொடரக் கூடாது என்றார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்க்கும் அதிகாரம் சபாநாயகருக்கு இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார். ராஜினாமா கடிதங்களை ஏற்றுக் கொள்வதற்கு சபாநாயகருக்கு தைரியம் இல்லை என அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் அளித்த ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என தடை விதித்து உத்தரவிட்டனர். ராஜினாமா கடிதம் கொடுத்த எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கூடாது. ராஜினாமாவை ஏற்பது பற்றியோ, நிராகரிப்பது பற்றியோ எந்த முடிவும் எடுக்கக் கூடாது. தற்போதைய நிலையை நீடிக்க வேண்டும். இது அரசியல் சாசன விவகாரம் என்பதால் விரிவான விசாரணை நடத்த வேண்டி உள்ளது என நீதிபதிகள் கூறினர். இந்த வழக்கின் விசாரணையை 16-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.