முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிலிப்பைன்சில் நிலநடுக்கம் 5.5. ரிக்டர் அளவாக பதிவு

சனிக்கிழமை, 13 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் 5.5 ரிக்டர் அளவில் பதிவானது. இதில் 25 பேர் காயம் அடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானா தீவுப்பகுதியில் உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 4.42 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.5 ரிக்டர் அளவுகோலில் பதிவானது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தில் வீடுகள், அரசு கட்டிடங்கள் சேதமடைந்தன. இதில் 25 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு பேரிடர் மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து