முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழை பெய்தாலும் சந்திராயன்-2 நாளை விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் திட்டவட்டம்

சனிக்கிழமை, 13 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

திருப்பதி : மழை பெய்தாலும் சந்திராயன் - 2 விண்கலம் நாளை விண்ணில் ஏவப்படுவதில் எந்த பாதிப்பும் இருக்காது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

நிலவை ஆராய்வதற்காக நாளை சந்திராயன்-2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அனுப்ப உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. சந்திராயன்-2 விண்கலமானது விண்வெளித் துறையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன், திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தார். அப்போது சந்திராயன்-2 திட்டம் வெற்றி பெற பிரார்த்தனை செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சந்திராயன்-2 விண்கலம் இரண்டு மாதத்தில் நிலவின் தென்துருவத்தை ஆராயத் தொடங்கும் என்று குறிப்பிட்டார்.

சந்திராயன்-2 விண்கலத்தை திங்கட்கிழமை அதிகாலை 2.51 மணியளவில் விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. மழை பெய்தாலும், விண்கலம் ஏவப்படுவதில் எவ்வித பாதிப்பும் இருக்காது. மழையால் பாதிக்காத வகையில் விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணுக்கு மனிதனை அனுப்பம் திட்டம் 2022-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

முன்னதாக, சந்திராயன்-2 கவுண்டவுன் தொடங்குவதற்கு முன்பு, உடுப்பியில் உள்ள கிருஷ்ண மடத்திற்கு, இஸ்ரோ தலைவர் சிவன் குடும்பத்தினருடன் சென்று சாமி தரிசனம் செய்தார். மடாதிபதியையும் சந்தித்து ஆசி பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து