முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு பலத்தை நிரூபிப்பாரா குமாரசாமி

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

கர்நாடக சட்டசபையில் இன்று 15-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என்று மாநில பா.ஜ.க. தலைவர் எடியூரப்பாவும் தெரிவித்துள்ளார். மேலும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுவதில் ஆட்சேபனை ஏதும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

கர்நாடக அரசியலில் கடந்த ஒரு வாரமாக பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. முதல்வர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் -ஜனதாதளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை தொடர்ந்து கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் வாபஸ் பெற்று விட்டனர். அத்துடன் பா.ஜ.க.வுக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் கர்நாடக சட்டசபையில் கூட்டணி அரசின் பெரும்பான்மை பலம் 101 ஆக குறைந்துள்ளது. அதே வேளையில் பா.ஜ.க.வின் பலம் சுயேச்சைகளுடன் சேர்த்து 107 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழக்கும் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ரமேஷ்குமார் இன்னும் அங்கீகரிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து தங்களின் ராஜினாமா கடிதங்களை அங்கீகரிக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வருகிற 16-ம்தேதி வரை எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இதற்கிடையே கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர்  தொடங்கிய போது முதல்வர்  குமாரசாமி, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தயார் என்றும், வாக்கெடுப்புக்கான தேதியை சபாநாயகர் முடிவு செய்யுமாறும் கோரிக்கை விடுத்தார். கர்நாடக அரசியலில் தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை நிலவுவதால் பா.ஜ.க., காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) ஆகிய கட்சிகள் தங்களின் எம்.எல்.ஏ.க்களை தனித்தனி நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைத்துள்ளனர். தங்களின் எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் பணிகளை அக்கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கர்நாடக சட்டசபையில் இன்று 15-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என்று மாநில பா.ஜ.க. தலைவர் எடியூரப்பாவும் தெரிவித்துள்ளார். மேலும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுவதில் ஆட்சேபனை ஏதும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.  இன்று நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து