முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் பதவி விலகல் கடிதம் டுவிட்டரில் வெளியிட்டார் சித்து

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

பஞ்சாப் மாநில அமைச்சர் பதவி விலகல் கடித நகலை நவ்ஜோத் சிங் சித்து டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார்.

பஞ்சாப் மாநில சுற்றுலா மற்றும் கலாசார விவகார துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் நவ்ஜோத் சிங் சித்து. முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற போது அதற்காக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதற்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சியில் இருந்தும் எதிர்ப்பு குரல் வலுத்தது.

ஆனால், சித்து தனது தரப்பு நியாயத்தினை விளக்கினார். முன்னாள் கிரிக்கெட் வீரர் என்ற முறையில் எனக்கு முறைப்படி அழைப்பு விடப்பட்டது. அதனை மதித்தே பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டேன். அந்த நிகழ்ச்சியில் சீக்கியர்களுக்கு நன்மை செய்யும் வகையிலான கர்டார்பூர் வழித்தடத்தினை திறந்து விடுவது பற்றி தன்னிடம் அந்நாட்டு உயரதிகாரி நம்பிக்கையுடன் பேசினார் என்றும் சித்து கூறினார். முன்னாள் ராணுவ அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்ட பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங்கும் சித்துவுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து பேசினார். இதனால் சித்துவுக்கு அதிருப்தி ஏற்பட்டது. இந்நிலையில், பஞ்சாப் மாநில அமைச்சர் பதவி விலகல் கடித நகலை டுவிட்டரில் சித்து வெளியிட்டு உள்ளார். அதில், கடந்த ஜூன் 10 என தேதியிடப்பட்ட எனது கடிதம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திஜிக்கு அனுப்பப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து