முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரு நாட்டின் முன்னாள் அதிபர் அமெரிக்காவில் கைது

புதன்கிழமை, 17 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

லிமா : பெரு நாட்டின் முன்னாள் அதிபர் அலெஜாண்ட்ரோ டோலடோ அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரு நாட்டின் முன்னாள் அதிபர் அலெஜாண்ட்ரோ டோலடோ. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. குறிப்பாக பெரு மற்றும் பிரேசிலை இணைக்கும் நெடுஞ்சாலைக்கான அரசுப் ஒப்பந்தப் பணிகளை வழங்குவதற்காக பிரேசில் கட்டுமான நிறுவனத்திடம் லஞ்சம் பெற்ற வழக்கில் அவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தவிர அவரது மனைவி, அவரது முன்னாள் தலைமை பாதுகாவலர், மகன் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்குகளில் அலெஜாண்ட்ரோ டோலடோவை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் அமெரிக்காவுக்கு சென்று விட்டார். கடந்த 2017-ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வசித்து வரும் அலெஜாண்ட்ரோவை நாடு கடத்தும்படி அந்நாட்டு அரசுக்கு பெரு அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட அமெரிக்க அரசு, அலெஜாண்ட்ரோவை கைது செய்தது. இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நாடு கடத்துவதற்கான நடைமுறைகள் தொடங்கின. இந்த நடைமுறை முடிவதற்கு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டு ஆகலாம் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து