முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோலி புகழை கெடுக்க வேண்டுமென்றே ஆடிய டோனி: யுவராஜ் தந்தை குற்றச்சாட்டு

புதன்கிழமை, 17 ஜூலை 2019      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோலி புகழை கெடுக்க வேண்டுமென்றே டோனி ஆடியதாக யுவராஜ் தந்தை குற்றஞ்சாட்டி உள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் எம்.எஸ்.டோனி, ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவ்வாறு எந்த அறிவிப்பும் வராத நிலையில், இந்திய அணி அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி வீரர்களை தேர்வு செய்யும் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் செல்லும் அணியில் டோனி இடம்பெற வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. அதே சமயம் இந்திய அணியில் டோனி இடம் பிடித்தாலும், ரிஷப் பண்ட் தான் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் தோல்வி குறித்து டோனியைக் குற்றம் சாட்டியுள்ளார்.

டோனி வேண்டுமென்றுதான் நியூசிலாந்து அணியின் டார்கெட்டை கடக்க அணிக்கு உதவவில்லை. இந்திய அணியில் தன்னைத் தவிர, மற்ற எந்த கேப்டனும், உலகக் கோப்பையைப் பெற்று, பெருமையை சம்பாதித்து விடக் கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம். டோனி தனது வாய்ப்புகளை வேண்டுமென்று பயன்படுத்தாமல் மறுத்து விட்டார் என கூறி உள்ளார். ஆனால், டோனி மீது யோகராஜ் குற்றம் சாட்டுவது முதன்முறையில்லை. ஏற்கனவே பலமுறை டோனியின் மீதான தனது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து