முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் வாகனங்களுக்கான பி.எஸ். 6 விதிமுறைகள் அமல்: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்

வியாழக்கிழமை, 18 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : டெல்லியில் வாகனங்களுக்கான பிஎஸ் 6 விதிமுறைகள் அமல்படுத்தபட்டுள்ளதாக மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அவர், பி.எஸ். 6 விதிகளுக்கு உட்பட்டு தரம் உயர்த்தப்பட்ட எரிபொருள் விற்பனை டெல்லியில் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு முதல் டெல்லியில் பி.எஸ். 6 விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படும் வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும். காற்று மாசுபாட்டை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் புறநகரில் உள்ள எக்ஸ்பிரஸ் சாலைகளால் நகருக்குள் லாரிகள் வருவது குறைந்துள்ளதாகவும், இப்போதே 60 ஆயிரம் லாரிகள் டெல்லிக்குள் வருவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இப்போதே பி.எஸ். 6 விதிகளுக்கு உட்பட்ட வாகனங்களை தயாரிக்க தொடங்கி விட்டனர்.

இதில் மாருதி நிறுவனம் பெலினோ, ஸ்விப்ட், ஆல்டோ, வேகன் ஆர் ஆகிய கார் நிறுவனங்கள் இன்ஜின்களை பி.எஸ். 6 விதிகளுக்கு ஏற்ப தரம் உயர்த்தி தயாரித்து வருகிறது. மேலும் அடுத்த ஆண்டு முதல் டீசல் வாகனங்களை விற்பதில்லை என்றும் மாருதி முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து ஹீரோ நிறுவனம் ஸ்ப்ளெண்டர் மோட்டார் சைக்கிளையும் 125 சி.சி. மெட்ரோ ஸ்கூட்டரையும் பி.எஸ். 6 விதிகளுக்கு ஏற்ப தரம் உயர்த்தியுள்ளது. இதனிடையே பி.எஸ். 6 விதிகளுக்கு ஏற்ப கார்களை தயாரிப்பதால் 10 சதவிகித அளவிற்கு விலை உயரும் என மஹிந்திரா நிறுவனம் கூறியுள்ளது. அதே நேரத்தில் பி.எஸ். 6 வாகனங்களுக்கான எரிபொருளை பி.எஸ். 4 ரக இன்ஜின் கொண்ட வாகனங்களில் பயன்படுத்தினால் அவை மிக தெளிவாக இயங்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து