முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அத்திவரதரை தரிசிக்க திரண்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி

வியாழக்கிழமை, 18 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

காஞ்சீபுரம் : அத்திவரதரை தரிசிக்க நேற்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலியாகினர். இது பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

18-வது நாளான நேற்று அத்திவரதருக்கு கத்தரிப்பூ நிற பட்டால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் சந்திரகிரகணம் என்பதால் பெரும்பாலான மக்கள் தரிசனத்தை தவிர்த்து விட்ட நிலையில் நேற்று முன்தினம் கூட்டம் வரவில்லை. இந்நிலையில் நேற்று அத்திவரதரை தரிசிக்க அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் திரண்டனர். கோவில் உட்பிரகாரம், 4 மாட வீதிகள், செட்டித்தெரு, அண்ணா தெரு ஆகிய வீதிகளை கடந்து 5 கிலோமீட்டர் தூரத்துக்கு மேல் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வரிசையில் காத்திருந்தனர்.  இந்த நிலையில் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக மாவட்ட கலெக்டர் பொன்னையா, அத்திவரதரை தரிசிக்க (நேற்று) ஒரு நாள் மட்டும் உள்ளூர் மக்கள் வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பக்தர்கள் உயிரிழந்தது அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து