முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் தொகுதி தேர்தல்: அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் மனு ஏற்பு

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோரது வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேலூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரத்திடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனுதாக்கல் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.

அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்ட பலர் தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான சண்முகசுந்தரத்திடம் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இறுதிநாளில் 17 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். வேட்புமனு பரிசீலனை நேற்று காலை தொடங்கி நடந்தது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமியின் வேட்பு மனுவும் ஏற்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து