எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் ராமசாமி படையாச்சியாருக்கு நினைவு மண்டபம் விரைவில் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் ராமசாமி படையாச்சியார் திருவுருவப் படத்தை திறந்து வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப வாழும் போதே வரலாறாக வாழ்ந்த ராமசாமி படையாச்சியாரின் முழு திருஉருவப் படத்தை வரலாற்று சிறப்புமிக்க நம்முடைய சட்டமன்றத்தில் திறந்து வைக்கும் இந்த விழாவில் பங்கேற்பதை பெருமையாக கருதுகிறேன், நமது சட்டப் பேரவை வரலாற்றில் இது ஒரு சிறப்பான நிகழ்வாகும். நாட்டுக்காகவும், சமுதாயத்திற்காகவும் உழைத்த நல்லவர்களை சிறப்பிப்பதில், மரியாதை செலுத்துவதில், அம்மாவும், அம்மாவின் அரசும் முன்மாதிரியாக திகழ்கிறது. அந்த வகையில், இந்திய விடுதலைப் போராட்டத்திலும் சமுதாயப் பணியிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட மரியாதைக்குரிய ராமசாமி படையாச்சியாரின் தன்னலமற்ற உழைப்பை பெருமைப்படுத்தவும், அன்னாரின் நினைவை சரித்திரம் போற்றும் வகையிலும், அன்னாரின் முழு உருவப் படத்தை இம்மாமன்றத்தில் நிறுவுவதில் அம்மாவின் அரசு பெருமைப்படுகிறது.
இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது என்றால், அந்த வளர்ச்சிக்கு உரமாக இருப்பது பல விடுதலைப் போராட்டத் தலைவர்களின் தியாகங்கள் தான் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. அப்படிப்பட்ட தியாக சீலர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் தான் ராமசாமி படையாச்சியார். 1952-ம் ஆண்டு தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை தோற்றுவித்து, அதே ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், ராமசாமி படையாச்சியார் உட்பட உழைப்பாளர் கட்சியைச் சேர்ந்த 19 வேட்பாளர்கள் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். மக்களவை தேர்தலிலும், இக்கட்சியை சேர்ந்த நான்கு வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். மக்கள் பணியாற்றுவதில் மற்ற தலைவர்களுடன் இணக்கமாக பணியாற்ற ராமசாமி படையாச்சியார் தயங்கியதில்லை.
1954-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராசரின் அமைச்சரவையில் ராமசாமி படையாச்சியார் உள்ளாட்சித் துறை அமைச்சராக பணியாற்றினார். அதன் பின்னர் 1980 மற்றும் 1984 -ம் ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனிலும், முன்னேற்றத்திலும் அதிக அக்கறை எடுத்துக் கொண்ட தலைவர்களில் முதல்வரிசை தலைவராக திகழ்ந்தவர் அவர். மிகவும் பின்தங்கிய மக்களை முன்னேற்றுவதற்காக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை உருவாக்க காரணமாக இருந்தவர். குறிப்பாக, வன்னியர் சமூகத்திற்கு மாநிலத்தில் 20 சதவீத ஒதுக்கீடும், மத்தியில் 2 சதவீத ஒதுக்கீடும் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை உழைப்பாளர் கட்சி மாநாட்டில் நிறைவேற்றிய முதல் தலைவர் இவர்தான்.
தீர்மானம் நிறைவேற்றியது முக்கியமல்ல. அந்த தீர்மானம் வெற்றி பெற தொடர் முயற்சி மேற்கொள்வதில் தான் அந்த தீர்மானத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது. இந்த தீர்மானத்தின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தவர். பின்தங்கிய மக்களை முன்னேற்ற வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாள் முழுவதும் உழைத்த அந்த உன்னத தலைவர் இந்த நாட்டில் பிறந்ததும், வாழ்ந்ததும் நாம் செய்த பாக்கியம் என்பதால், அவர் பிறந்த நாளான செப்டம்பர் 16-ம் நாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று 29.6.2018 அன்று நான் சட்டமன்றத்தில் அறிவித்தேன்.
மேலும், ராமசாமி படையாச்சியார் பிறந்த கடலூர் மாவட்டத்தில், அரசு சார்பாக நினைவு மண்டபமும், அதில் அன்னாருடைய ஒரு முழு உருவ வெண்கலச் சிலையும் அமைக்க வேண்டும் என்று வன்னியர்குல பெருமக்களும், அமைச்சர் பெருமக்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், என்னிடம் கோரிக்கை வைத்தார்கள். அதனை முழு மனதாக ஏற்று, 19.7.2018 அன்று மேட்டூரில் நடைபெற்ற ஒரு அரசு விழாவில் ராமசாமி படையாச்சியாருக்கு நினைவு மண்டபமும். முழு உருவ வெண்கலச் சிலையும் அமைக்கப்படும் என்று நான் உறுதியளித்தேன். வாக்குறுதி கொடுத்ததோடு நிற்காமல், அதனை உடனடியாக நிறைவேற்றும் ஆட்சி, அ.தி.மு.க. ஆட்சி தான் என்பதை அம்மா பலமுறை நிரூபித்துக் காட்டியிருக்கிறார். அவர்களிடம் குருகுல பயிற்சி பெற்ற நாங்களும், சொன்னதை செய்வோம். சொல்லாததையும் செய்வோம் என்ற கொள்கையின் அடிப்படையில், கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் ராமசாமி படையாச்சியாருக்கு 2 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1.5 ஏக்கர் அரசு நிலம் ஒதுக்கி, அதில் நினைவு மண்டபமும், திருஉருவ வெண்கலச் சிலையும் அமைக்க 14.9.2018 அன்று நான் அடிக்கல் நாட்டினேன். இம்மண்டபம் விரைவில் திறக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 12 hours ago |
ஆப்பிள் பான் கேக்4 days 13 hours ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 18-03-2024.
18 Mar 2024 -
பிரதமர் நரேந்தி மோடி இன்று சேலம் வருகை : பிரம்மாண்ட பிரச்சார கூட்டத்தில் பேசுகிறார்
18 Mar 2024சேலம் : இன்று சேலம் நகருக்கு வருகை தரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறவுள்ள பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
-
பொன்முடி பதவியேற்பு விவகாரம்: கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
18 Mar 2024புதுடெல்லி : பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ஆர்.என்.
-
தமிழகத்தில் நாளை முதல் லேசான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 23-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கோவை பார்லி. தொகுதியில் பா.ஜ.க.தான் போட்டியிடும் : அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டம்
18 Mar 2024கோவை : கோவை பா.ஜ.க. கோட்டையாக உள்ளது. இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவது உறுதி என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
போதை பொருள் புழக்கம் அதிகரிப்பு: தமிழக அரசுக்கு எடப்பாடி கண்டனம்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரிப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு
18 Mar 2024சென்னை, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் வெற்றி : மே மாதம் பதவியேற்பு விழா நடக்கிறது
18 Mar 2024மாஸ்கோ : ரஷ்ய அதிபர் தேர்தலில் 87.29 சதவீத வாக்குகள் பெற்று புடின் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
18 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.
-
தி.மு.க.வின் பார்லி. தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனய
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்
18 Mar 2024சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு
18 Mar 2024பெஷாவர் : வடமேற்கு பாகிஸ்தானில் நேற்று காலை ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றது.
-
திருச்செந்தூர் கோவிலில் ஓ.பி.எஸ். சிறப்பு வழிபாடு
18 Mar 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: 24-ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.
-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு
18 Mar 2024சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
கவர்னர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம் : தமிழகத்தில் போட்டியிட போவதாக அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் மக்கள
-
டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழல் வழக்கு: அமலாக்க துறையின் சம்மனை புறக்கணித்தார் கெஜ்ரிவால்
18 Mar 2024புதுடெல்லி : டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்தம் அளிக்கப்பட்டதில் ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முதல்வர் கெஜ்ர
-
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இ.பி.எஸ்.யிடம் ஒப்படைப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அ.தி.மு.க.
-
புதிய அரசின் முதல் 100 நாட்களுக்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் : மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
18 Mar 2024புதுடெல்லி : தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசின் முதல் 100 நாட்கள் மற்றும் 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை வகுக்குமாறு மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டு
-
டிராக்டருடன் கார் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
18 Mar 2024பாட்னா : பீகாரில் டிராக்டருடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சபர்மதி- ஆக்ரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து : பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு
18 Mar 2024ஜோத்பூர் : ராஜஸ்தானில் ஆஜ்மீர் அருகே சபர்மதி - ஆக்ரா விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க.
-
தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, தமிழகத்தில் ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.