முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

சனிக்கிழமை, 20 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மற்றும் கோவையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.

குமரி கடல், மாலத்தீவு, மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அரியலூரில் 9 சென்டி மீட்டரும், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 8 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது என கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து