முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

சனிக்கிழமை, 20 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

சென்னை : சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில், நடைபெற்ற நகரத்தார்களின் சர்வதேச வணிகம் மற்றும் வர்த்தகம் தொடர்பான கருத்தரங்கினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர்,

 தஞ்சாவூர் கோவில் போல தென்கிழக்கு ஆசியாவில் பல கோவில்கள் பிரமாண்டமாக இருக்கிறது என்றும், அதனுடைய சிற்பக்கலைகள் பாராட்டத்தக்கது. கல்வி, தொழில் என அனைத்து பரிமாணங்களிலும் இந்தியர்கள் முன்னேறி வருகின்றனர். அடுத்த தலைமுறையின் போது இந்தியர்கள் தான் மற்ற நாட்டினருக்கு குருவாக இருப்பார்கள். சூட்கேஸ்கள் ஆங்கிலேயர்களின் கலாச்சாரத்தை பின்பற்றக்கூடியது. நமது கலாச்சாரத்தை பின்பற்றும் நோக்கில்தான் நிதி பட்ஜெட் சாதாரணமாக தாக்கல் செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.

மேலும் மோடி அரசின் வெளிப்படைத்தன்மையை நிரூபிக்கும் வகையில், சூட்கேஸ் போன்ற பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. மத்திய அரசு இந்தி திணிப்பு செய்வதில்லை. தமிழை வளர்க்கும் முயற்சியில் நாங்களும் ஈடுபடுகிறோம். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தொழில் முனைவோர்களை உருவாக்கவும், தொழில்களை பெருக்கிடவும் அரசு சார்பில் தேவையான நடவடிக்கைகளை கண்டிப்பாக மத்திய அரசு எடுக்கும். இவ்வாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து