முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.வங்கம், உ.பி. உள்ளிட்ட மாநில கவர்னர்கள் மாற்றம்

சனிக்கிழமை, 20 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மேற்குவங்கம், பீகார், திரிபுரா, நாகாகாலாந்து ஆகிய மாநிலங்களின் கவர்னர்களை  மாற்றி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரபிரதேச கவர்னர் ராம்நாய்க்கிற்கு பதிலாக மத்தியபிரதேச கவர்னராக இருக்கும் ஆனந்திபென் படேலை நியமித்து ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இதே போல் மேற்குவங்க கவர்னராக கேசரிநாத் திரிபாதிக்கு பதில் ஜெக்தீப் தாங்கரை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் திரிபுரா கவர்னராக ரமேஷ் பயஸ் மற்றும் பீகார் கவர்னராக பாகுசவுகான், நாகாலாந்து கவர்னராக ஆர்.என்.ரவியை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். பீகார் கவர்னராக இருந்த லால் ஜி தாண்டன் மத்தியபிரதேச கவர்னராக மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். மாநிலங்களின் கவர்னர்களை மாற்றியும், புதிதாக நியமித்தும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து