எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : காவிரி விவகாரத்தில் சட்டப் போராட்டம் நடத்தி அ.தி.மு.க. வெற்றி பெற்றது. ஆனால் கிடைத்த வாய்ப்பை நீங்கள் தவற விட்டு விட்டீர்கள் என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்தார்.
சட்டசபையில் பொதுத்துறை, நிதி மற்றும் வீட்டு வசதித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் நேற்று கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறும் போது,
காவிரி தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சினை ஆகும். காவிரியை நம்பித்தான் மெகா கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. காவிரி ஆணையத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்காமல் மத்திய அரசு தவிர்த்து வருகிறது. தற்போது 66 டி.எம்.சி. தண்ணீரை தேக்கும் வகையில், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா வேகமாக ஈடுபட்டு வருகிறது. சுப்ரீம் கோர்ட் மற்றும் நடுவர் மன்றத்தை மீறும் செயலை தடுத்து நிறுத்த வேண்டும். இது தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று பேசினார்.
இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்து பேசுகையில்,
நிரந்தர தலைவர் அமைப்பது தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது. மேகதாது அணை குறித்தும், வழக்குகள் நடைபெற்று வருகின்றன. காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என்று கடிதம் எழுதப்பட்டுள்ளது. பிரதமரையும், புதிதாக பொறுப்பேற்ற நீர்வளத் துறை அமைச்சரையும் சந்தித்து முறையிடப்பட்டிருக்கிறது. மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. அங்கு அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாகி விடும். எனவே மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளோம் என்றார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மத்திய அரசிடம் அதிக அதிகாரம் குவிந்துள்ளது. மத்தியில் 17 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த போது, காவிரி நதிநீர் விஷயத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள். எதிர்க்கட்சி தலைவர் தற்போது இலவச ஆலோசனை வழங்குகிறார் என்றார். அப்போது தி.மு.க. உறுப்பினர்கள் கூச்சலிட்டதால் அவையில் குழப்பம் ஏற்பட்டது அதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசும் போது, தங்களது ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடர்பாக குறிப்பிட்டார். அதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது,
காவிரி பிரச்னை பற்றி பேசி கொண்டிருக்கிறோம். எதிர்க்கட்சி தலைவர் பேசும் போது, அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தோம். மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, கிடைத்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்த தவறி வீட்டீர்கள். நீங்கள் பயன்படுத்தியிருந்தால், நிரந்தர தீர்வை பெற்றிருக்கலாம். ஆனால் நீதிமன்ற தீர்ப்புகளை பெற்றுத்தான் உரிமைகளை நிலைநாட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்தவில்லை. 2007-ம் ஆண்டு நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு கிடைத்த பின்னர் 2 மாத காலம் மத்திய ஆட்சியில் இருந்தீர்கள். அப்போது நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் பிரச்னைக்கு வேலையில்லாமல் போய் இருக்கும். ஆனால் தவறு செய்தவர்கள் நீங்கள் தான் என்றார்.
அமைச்சர் ஜெயகுமார் குறுக்கிட்டு, முதல்வரும் நான் கூறிய கருத்தைதான் தெரிவித்திருக்கிறார். 17 ஆண்டு கால மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது என்ன செய்தீர்கள். நீங்கள் செயல்பட்டு இருந்தால், ஜீவாதார பிரச்னை நீங்கியிருக்கும் என்றார். பின்னர் துரைமுருகன் எழுந்து பேசுகையில், காவிரி நடுவர் மன்றம் வேண்டும் என்று தீர்மானம் போட்டதே கருணாநிதி ஆட்சி தான் என்றார். அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கையில், எதிர்க்கட்சி தலைவர் சத்தமாக பேசினால் உண்மையாகி விடும் என நினைக்கிறார். விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னையான காவிரி நதிநீர் விஷயத்தில் 2007-ம் ஆண்டு இறுதி தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் 2 மாத காலம் மத்தியில் ஆட்சியில் இருந்த போது அதை பயன்படுத்தி இருந்தால், வழக்கு தொடராமல் தடுத்திருக்க முடியும். ஜெயலலிதா தான், நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் இடம் பெற செய்ய தமிழக உரிமையை நிலைநாட்டினார். ஆனால் நீங்கள் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தாமல் தவற விட்டீர்கள். அதிகாரம் என்பது ஒரு முறை தான் கிடைக்கும். அதை நீங்கள் தவற விட்டீர்கள். காவிரி நதிநீர் பிரச்சினையில் வாழப்பாடி ராமமூர்த்தி மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள் என்றார்.
அப்போது எதிர்க்கட்சி தலைவர் துரைமுருகன் பேசும் போது, இறுதி தீர்ப்பில் குறைபாடு இருந்தால், அது தொடர்பாக முறையிட வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. 2 மாதத்தில் என்ன செய்ய முடியும் என்றார். அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் சமாளிக்க பார்க்கிறார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருந்தால், விவசாயிகளுக்கு நன்மை கிடைத்திருக்கும். போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்றார். அதை தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், காவிரி நதி நீர் தொடர்பாக பலமுறை இங்கு பேசி விவாதம் நடைபெற்றுள்ளது. எது உண்மை என்று நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். இது பற்றி நீங்கள் பேசிக் கொண்டிருந்தால், எங்களிடமிருந்து பதில் வந்து கொண்டே இருக்கும். காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.