எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : முல்லை பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய 4 அணைகளின் மீதான தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்,
சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு பிரச்சினை எழுப்பினார்.அப்போது அவர் பேசுகையில் , மத்திய அரசு அணைகளின் பாதுகாப்பை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது மாநில உரிமைகளை பறிக்கும் செயல் ஆகும். தமிழகத்தில் முல்லை பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய 4 அணைகளை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தொடர்ச்சியாக மத்திய அரசு அதிகாரங்களை தன்னிடம் குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.
அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் கூறியதாவது:மத்திய அரசு 12.12.2018 அன்று அணை பாதுகாப்பு சட்ட மசோதா, 2018 ஐ நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகம் செய்தது. இது தொடர்பாக பிரதமருக்கு 14.12.2018 அன்று நான் எழுதிய கடிதத்தில், இந்த சட்ட மசோதாவை திரும்பப் பெறுமாறு நீர்வள அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறும், அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளும் வரை இம்மசோதாவை நிறைவேற்றக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளேன்.இந்த மசோதாவிற்கு முன்பாக, மத்திய அரசு ஏற்கனவே வரைவு அணை பாதுகாப்பு சட்ட மசோதா, 2016 ஐ நாடு முழுமைக்கும் பொருந்தும் வகையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு முன்பாக அனைத்து மாநிலங்களின் ஆலோசனை, கருத்துகளை கோரியது. ஒரு மாநிலத்திற்கு சொந்தமானதாக இருந்தும் வேறொரு மாநிலத்தில் அமைந்திருக்கும் அணைகளுக்கென தனிப்பட்ட சட்டப்பிரிவு ஏதும் இந்த மசோதாவில் இடம் பெறாததால், இந்த மசோதா தமிழ்நாட்டிற்கு ஏற்புடையதல்ல.
எனவே, 11.9.2016 அன்று பிரதமருக்கு இந்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி கடிதம் எழுதப்பட்டது. 15.6.2018 அன்று பிரதமருக்கு மீண்டும் இது தொடர்பாக கடிதம் எழுதப்பட்டது. மேலும், இதே கருத்தினை வலியுறுத்தி 26.6.2018 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பிரதமருக்கு அனுப்பப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 26.6.2018 அன்று தமிழ்நாடு மக்களின் கருத்துகளை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று 14.12.2018 நாளிட்ட கடிதத்தில் பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணை பாதுகாப்பு சட்ட மசோதா, 2018-ன் பிரிவு 23(1)-ன் படி ஒரு மாநிலத்திற்கு சொந்தமான அணை வேறொரு மாநிலத்தில் அமைந்திருக்கும் பட்சத்தில், அந்த அணை தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும். தமிழ்நாட்டிற்கு சொந்தமான முல்லைப்பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் ஆகிய 4 அணைகளும் தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தங்களின் அடிப்படையில், தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டு, இயக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த அணைகளை தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து அணையின் மேல் பகுதி மற்றும் கீழ் பகுதியில் அமைந்துள்ள மாநிலங்களின் பிரதிநிதிகளை கொண்ட குழுவை அமைப்பது தமிழ்நாட்டின் உரிமைகளில் தலையிடுவதாகும். இது அரசியல் சாசன அமைப்பிற்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் முரணானதாகும்.
எனவே, அணை பாதுகாப்பு மசோதா, 2018 - ன் பிரிவு 23(1) - ஐ, அணை வேறு மாநிலத்தில் அமைந்திருந்தாலும் அந்த அணை எந்த மாநிலத்திற்கு சொந்தமோ அந்த மாநிலத்தின் மாநில அணை பாதுகாப்பு அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும்படி திருத்தம் செய்ய வேண்டும் எனவும், முல்லைப் பெரியாறு அணையின் மீதான தமிழ்நாட்டின் உரிமை உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்பு அமர்வு 7.5.2014 அன்று வழங்கிய தீர்ப்பில் உறுதி படுத்தப்பட்டுள்ளது என்பதையும் பாரதப் பிரதமருக்கு 14.12.2018 நாளிட்ட கடிதம் வாயிலாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மேலும், அணையை பராமரிக்கும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு, அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, அணை அமைந்துள்ள காடுகள், வன விலங்குகள் சரணாலயத்திற்குள் சென்று வர முழு உரிமை அளிக்கும் வகையில் பிரிவு 23-ன் கீழ் ஒரு துணைப் பிரிவினை கூடுதலாக இந்த மசோதாவில் சேர்க்க வேண்டும் எனவும் 14.12.2018 நாளிட்ட கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரதமரிடம் 27.1.2019 அன்று அளித்த கோரிக்கை மனுவில் உள்ள பல்வேறு கோரிக்கைகளில் ஒன்றான அணை பாதுகாப்பு சட்ட மசோதா, 2018 குறித்து தனது 15.6.2018 மற்றும் 14.12.2018 நாளிட்ட கடிதங்களைச் சுட்டிக்காட்டி, தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் அமைப்பது மாநிலங்களின் உரிமையில் தலையிடுவதாகும் என்பதைக் குறிப்பிட்டு, அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளும் வரை அணை பாதுகாப்பு சட்ட மசோதா, 2018 -யை நிறைவேற்றக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதே கருத்து பிரதமரிடம் 15.6.2019 அன்று அளித்த கோரிக்கை மனுவிலும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.அணை பாதுகாப்பு சட்ட மசோதா, 2018-ஐ திரும்பப்பெற வைத்து தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.அண்மையில் மத்திய அமைச்சரவையின் பொருளாதார கமிட்டி அணை பாதுகாப்பு மசோதாவிற்கு அனுமதி அளித்தாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. முன்பு இம்மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும்போது தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட அ தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் தீவிர எதிர்ப்பினை தெரிவித்தனர். அதனால் அந்த மசோதா சட்டமாகவில்லை.
முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் ஆகிய நான்கு அணைகளின் மீதான தமிழ்நாட்டின் உரிமையினை நிலைநாட்ட அம்மாவின் அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்கும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ
-
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024சென்னை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு: ஆம் ஆத்மி
27 Mar 2024புதுடெல்லி, 7 நாட்களாக சிறையில் உள்ள நிலையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.
-
உ.பி. மீரட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
27 Mar 2024லக்னோ, உ.பி. மீரட்டில் இருந்து தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்குகிறார்.
-
மகாராஷ்டிரா மாநிலத்தில் இடைத்தேர்தல் நிறுத்தம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024மும்பை, மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கடும் தோல்வியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
27 Mar 2024சென்னை, குறுக்கு வழிகளில் செயல்படும் தி.மு.க பாராளுமன்றத் தேர்தலில் கடும் தோல்வியை சந்திக்கும் என்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
27 Mar 2024சென்னை, பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை, ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.