முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை: காவிரியில் 8,300 கன அடி நீர் திறப்பு

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

மைசூர் : காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நடந்த போது காவிரி ஆற்றில் தமிழகத்திற்குரிய தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மதித்து கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவித்தார்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இதே போல் கேரள மாநிலத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்த அணைகளில் இருந்து நேற்று முன்தினம் வினாடிக்கு 5,199 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

கர்நாடக அணைகளில் இருந்து கடந்த 17-ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் காலை பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் காலை நீர் வரத்து வினாடிக்கு 500 கன அடியில் இருந்து 700 கனஅடியாக அதிகரித்ததாக கூறப்பட்டது. 

மொத்தமாக 124 அடி கொள்¬ள¬ளவு கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணை¬யின் நீர்மட்டம் தற்போது 90 அடியாக உள்ளது. 84 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர் மட்டம் 69 அடியாக உள்ளது. இரு அணைகளுக்கும் வரும் நீரின் அளவு அதிகரித்துள்ள நிலையில், இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு 8 ஆயிரத்து 300 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில அணைகளில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழக பகுதிக்கு வந்து கொண்டிருப்பதால் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தண்ணீர் வரத்தின் அளவை கண்காணித்து வருகின்றனர். மத்திய நீர்வளத்துறையினர் பிலிகுண்டுலு பகுதியில் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்தை நேற்று முன்தினம் அளவீடு செய்தனர்.

கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மிகக் குறைந்த அளவிலேயே தண்ணீர் வரத்து இருந்தது. இந்த நிலையில் நேற்று  முன்தினம் தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்ததால் சினிபால்ஸ் அருவி உள்ளிட்ட அருவிகளில் ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்ட தொடங்கியது. விடுமுறை நாளான நேற்று முன்தினம்  ஒகேனக்கல்லில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஒகேனக்கல்லில் மெயின் அருவி மற்றும் சினிபால்ஸ் மற்றும் காவிரி கரையோரம் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் மீன் விற்பனை மற்றும் பரிசல் சவாரி விறுவிறுப்படைந்துள்ளது. காவிரி நீர் வருகையில் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து