முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழை: வானிலை மையம்

திங்கட்கிழமை, 22 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பருவமழை காரணமாக கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. பல  இடங்களில் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பருவமழை காரணமாக தமிழகத்திலும் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. ஒரு சில  இடங்களில் கனமழை கொட்டுகிறது. சென்னை மாநகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல மழைப்பொழிவு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென் தமிழக பகுதிகளில் காற்று மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கனமழை பொறுத்தவரையில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை  பெய்யக்கூடும். மேலும் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தென் கிழக்கு அரபிக்கடல், குமரிகடல் மற்றும் மன்னார் வளைகுடாப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். இந்த பகுதிகளில் பலத்த காற்று வீசும். மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அடுத்து வரும் இரு தினங்களுக்கு தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை இடைவெளிவிட்டு இந்த முறை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து