முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

செவ்வாய்க்கிழமை, 23 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : கர்நாடகம் மாநிலத்தின் பெங்களூருவில் 144 தடை உத்தரவை பிறப்பித்து போலீஸ் கமிஷனர் நேற்று உத்தரவிட்டு உள்ளார்.

பெங்களூருவில் அடுத்த 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என போலீஸ் கமிஷன்ர் அலோக் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும்  25-ம் தேதி மாலை 6 மணி வரை 144 தடை அமலில் இருக்கும். தடை உத்தரவை முன்னிட்டு, அனைத்து மதுபானக் கடைகளும், பார்களும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சட்டத்தைமீறுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து