முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

சனிக்கிழமை, 27 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

மேட்டூர் : காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால், கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து, காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு 11,600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் 43.14 கன அடியாக உள்ளது. அணைக்கு 7,200 கன அடிநீர் வந்து கொண்டுள்ளது. அணையில் 13.74 டி.எம்.சி., நீர் உள்ள நிலையில், குடிநீருக்காக ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேட்டூர் அணை 4 நாட்களில் 4 அடி உயர்ந்துள்ளது.ஒகேனக்கல் காவிரி ஆற்றில், 8,500 கன அடி நீர் வந்து கொண்டுள்ளதால், பரிசல் இயக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து