எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து வாணியம்பாடியில் அ.தி.மு.க. தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
வறட்சி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எல்லா கிராமத்தினருக்கும் அம்மாவின் அரசு உரிய நிவாரண நிதி வழங்கியது. பொங்கல் பண்டிகையையொட்டி எல்லா குடும்பத்திற்கும் தலா ரூ. ஆயிரம் வழங்கிய அரசு அம்மாவின் அரசு, இந்த தேர்தல் முடிந்ததும் 2 ஆயிரம் ரூபாயை அம்மா அரசு வழங்கும். இந்த திட்டம் ஏற்கனவே தொடங்கி விட்டது. 2 ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து வீடு, வீடாக கணக்கெடுப்பு நடந்து வருகிறது. கணக்கெடுப்பு முடிந்ததும் 70 லட்சம் ஏழைத் தொழிலாளர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். நாங்கள் சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம்.
தி.மு.க. ஆட்சியில் 11 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தான் தேவையாக இருந்தது. ஆனால் அப்போது எப்போது மின்சாரம் வரும். எப்போது போகும் என்று தெரியாத நிலை இருந்தது. ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றதும் தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். இப்போது கிட்டத்தட்ட 16 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் மாநிலமாக தமிழகம் மாறியிருக்கிறது. மின் உற்பத்தி பெருகினால் தொழில்வளம் பெருகும். தமிழகத்தில் புதிய, புதிய தொழில்கள் வந்த வண்ணமிருக்கிறது. 3 லட்சத்து 45 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் அளவுக்கு 304 தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் சிறந்த ஆட்சியும் சிறந்த நிர்வாகமும் நடப்பதால் தான் தொழில் நிறுவனங்கள் வருகின்றன. கிட்டதட்ட 5 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும் 5 லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைத்திருக்கிறது. 10 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளை தந்த அரசு அம்மாவின் அரசு.
அ.தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்று ஸ்டாலின் கூறிக் கொண்டிருக்கிறார். இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 256 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தமிழ்நாட்டில் தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. கருவிலேயே நம்முடைய குழந்தைகள் சிறப்பாக வளர வேண்டும் என்பதற்காக ஏழைத் தாய்மார்களுக்கு மகப்பேறு உதவித் தொகையாக ரூ. 18 ஆயிரம் வழங்கினார் முதல்வராக இருந்த ஜெயலலிதா. 18 லட்சம் தாய்மார்களுக்கு அம்மா பரிசு பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. பிறந்த குழந்தைகளுக்கும் நல்ல திட்டங்களை தந்தது அம்மாவின் அரசு தான். பிறக்கும் குழந்தைகளின் இறப்பு சதவீதம் இந்தியாவில் 33 சதவீதமாக இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் பிறக்கும் குழந்தைகளின் இறப்பு சதவீதம் 22 சதவீதமாக இருந்தது. அதை 16 சதவீதமாக குறைத்திருக்கிறோம்.
தமிழ்நாட்டில் உயர்ந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எதிர்கால தமிழகம் அறிவார்ந்த தமிழகமாக மாற வேண்டும் என்பதற்காக மடிக்கணினி திட்டத்தை கொண்டு வந்தார் ஜெயலலிதா. இதன் மூலம் மாணவர்கள் திறமையானவர்களாக அதிக மதிப்பெண் பெறுபவர்களாக மாற முடியும். இன்னும் பத்தாண்டுகளில் தமிழகம் விஞ்ஞான உலகில் மிகச் சிறந்த மாநிலமாக மாற மடிக்கணினி திட்டம் உதவும். அமெரிக்காவில் கூட இல்லாத இலவச மடிக்கணினி திட்டத்தை அறிமுகம் செய்து வழங்கியவர் ஜெயலலிதா. தி.மு.க. ஆட்சியில் இது போன்ற என்ன திட்டம் கிடைத்தது?
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் விஞ்ஞான ரீதியில் பொதுமக்களிடம் பொய் வாக்குறுதிகளை சொல்லி ஏமாற்றி வருகிறார். தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 72 ஆயிரம் வழங்குவோம் என்று கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சி வாக்குறுதி அளித்தது. அவர்களால் எப்படி தர முடியும். இது போன்ற பொய்யான வாக்குறுதி என்ற மிட்டாயை கொடுத்து தி.மு.க. மக்களை ஏமாற்றி வருகிறது. அம்மா அரசின் திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ளாமல் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் மு.க.ஸ்டாலின். அம்மாவின் ஆட்சியில் விவசாயிகளுக்கு 20 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மு.க. ஸ்டாலின் விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்வோம் என்றும், படிப்பிற்காக வாங்கிய வங்கிக் கடனை தள்ளுபடி செய்வோம் என்றும் பச்சைப் பொய் சொன்னார். அதை செய்ய முடிந்ததா? தி.மு.க. கூட்டணியால் மத்திய ஆட்சியிலும் நுழைய முடியவில்லை. மாநில ஆட்சியிலும் நுழைய முடியவில்லை. நாங்கள் எதை செய்வோமோ அதைத்தான் சொல்வோம். இந்த நாட்டினுடைய முதுகெலும்பு விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும்தான். நான் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சொன்னதை செய்தார்கள். அவர்களது வழியில் மக்களுக்கு தேவையான திட்டங்களை நாங்கள் தருவோம். ஐ.எஸ்.ஐ. முத்திரை போல் தரமுள்ள கட்சி அ.தி.மு.க.தான். தரமில்லாத கட்சி தி.மு.க. மத்தியிலும், மாநிலத்திலும் தற்போது சிறப்பானதொரு ஆட்சியை நடத்தி வருகிறோம்.
தி.மு.க. ஆட்சியில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் தான் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 48.6 சதவீதமாக அதிகரித்தது. இந்தியாவில் உயர்கல்வியில் அதிக மாணவர்கள் படிக்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான்.
இரண்டரை ஆண்டில் 6 சட்டக்கல்லூரிகளை கொண்டு வந்தது அம்மாவின் ஆட்சி தான். சட்டம் பயில மாணவர்களுக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருந்தது. அந்த தடையை அகற்றி ஏழை மாணவர்களும் சட்டம் படிக்கலாம் என்ற நிலையை கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு. இன்னும் 2021-ம் ஆண்டு வரை அம்மாவின் ஆட்சி இருக்கிறது. இன்னும் எண்ணற்ற திட்டங்கள் வரவிருக்கிறது.
இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு பேணி காக்கப்படும் ஒரே மாநிலம் தமிழகம் தான். இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் தான். ஒரு மாநிலத்தில் தொழில் வளம் செழிக்க அமைதி நிலவ வேண்டும். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நிம்மதியை கொடுக்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான். குடிசையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக 2023-ம் ஆண்டிற்குள் ஒரு லட்சத்து 10 ஆயிரம் வீடுகள் கட்டித் தர திட்டமிட்டிருக்கிறோம். வாணியம்பாடியில் வீடில்லாத தொழிலாளர்களுக்கு பசுமை வீடுகள் கட்டித்தரப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், அ.தி.மு.க. ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் தமிழ்மகன் உசேன், அமைச்சர்கள் கே.பி. அன்பழகன், உள்ளிட்ட அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.