எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் : முதல்வர் பதவிக்காக ஸ்டாலின் வெறி பிடித்து அலைகிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார்.
வேலூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து நேற்று கே.வி.குப்பத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
ஸ்டாலின் பேசும் போது, திட்டமிட்டு சதி செய்து இந்தத் தேர்தலை நிறுத்தி விட்டதாக சொல்கிறார். வேண்டுமென்று நாங்களா தேர்தலை நிறுத்தினோம்? எதிர்த்து போட்டியிட்டவர் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம். நாங்கள் ஒன்றும் திட்டமிட்டு சதிசெய்து இந்தத் தேர்தலை நிறுத்தவில்லை. நீங்கள் மூட்டை மூட்டையாக பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டுமென்பதற்காக பதுக்கி வைத்திருந்த பணத்தை வருமானவரித் துறை கண்டுபிடித்து அதனால் நிறுத்தப்பட்டது தான் இந்தத் தேர்தல். நாம் சதி செய்துவிட்டோம் என்று ஸ்டாலின் பச்சை பொய் பேசுகிறார். இந்த நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரைக்கும், இந்தத் தேர்தல் தள்ளி வைப்பதற்கு முழுக்க, முழுக்க காரணம் தி.மு.க.தான். அ.தி.மு.க. எந்த காரணத்தைக் கொண்டும் தேர்தலை நிறுத்துகின்ற முயற்சியில் ஈடுபடவில்லை. எனவே, உண்மை நிலையை அறிந்து ஸ்டாலின் பேச வேண்டும். எல்லா ஆதாரமும் தேர்தல் கமிஷனிடத்தில் இருக்கிறது. அந்த வழக்கையெல்லாம் நீங்கள் சந்திக்க வேண்டிய நிலை வரும்பொழுது, நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவார்கள்.
கர்நாடகத்தில் நடந்ததைப் பற்றி பேசுகிறார், கர்நாடகத்தில் உங்கள் கூட்டணி ஆட்சி தானே நடந்தது. ஸ்டாலின் ராசியானவர். உங்களுடன் சேர்ந்திருந்த காரணத்தினால் தான் அங்கேயும் ஆட்சி போச்சு. ஆட்சிக்கும் வர முடியவில்லை, கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றதும் போய் விட்டது. நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்தது. அப்பொழுது ஸ்டாலின் ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்தார், மத்தியிலேயும், மாநிலத்திலேயும் நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம் என்று கூறி பொய்யை மூட்டை மூட்டையாக அவிழ்த்து விட்டார். அதை மக்கள் நம்பி வாக்களித்து விட்டார்கள். பொய் பேசுவதற்கு ஒரு அளவு உண்டு. உண்மையாக இருக்குமோ என்று மக்கள் எண்ணக்கூடிய அளவிற்கு பொய்யை மாறி, மாறி எல்லா கூட்டத்திலும் சொல்லி, மக்கள் மனதில் பதியவைத்து அதனால் ஏமாற்றிப் பெற்ற வெற்றிதான் பாராளுமன்ற வெற்றி, சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றி, உண்மையான வெற்றி அல்ல. நாங்கள் மனசாட்சிப்படி மக்களை சந்தித்தோம். எம்.ஜி.ஆர்., அம்மா ஆகிய இருபெரும் தலைவர்கள் வழியில் நாங்கள் நடக்கின்றோம். உண்மையை மக்களிடத்தில் எடுத்துச் சொன்னோம், இதனை செய்தோம், இதனை செய்யப் போகிறோம் என்று ஆணித்தரமாக சொன்னோம். அதனடிப்படையில் மக்கள் எங்களுக்கு வாக்களித்தார்கள். கிராமம் நிறைந்த பகுதி இந்தப் பகுதி. நானும் ஒரு விவசாயி, இன்றைக்கும் விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன். விவசாயிக்கு ஒரு நாட்டை ஆளக்கூடிய தகுதி இல்லையா? ஒரு சாதாரண விவசாயி முதலமைச்சராக இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை, அதனால்தான் இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். சட்டம் இயற்றுகின்ற மாமன்றம், மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கக்கூடிய இடம் சட்டமன்றம், அந்த சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு அந்த நாட்டு மக்களுக்குத் தேவையான திட்டங்கள் கொடுக்கின்ற இடமான அந்த மாமன்றத்தில், பெரும்பான்மை நிரூபிக்கவேண்டுமென்று சபாநாயகர் உத்தரவிட்டதன் பேரில், நாங்கள் எல்லாம் இருக்கின்றோம். எதிர் அணியில் இருக்கின்றவர்கள் எந்த அளவிற்கு அராஜகம் செய்தார்கள் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். நான் நினைத்திருந்தால் கலைத்திருப்பேன் என்று நீங்களா பேசுகிறீர்கள். ஒருக்காலும் அ.தி.மு.க.வையும், எங்கள் ஆட்சியையும் வீழ்த்த முடியாது. ஆட்சியை கலைக்க முடியாது, கட்சியை உடைக்க முடியாது. அம்மா மறைந்த பிறகு, ஒரு விவசாயி அந்த நாற்காலியில் அமர்ந்திருக்கின்றேன். உங்களைப்போல் பதவிக்காக நாங்கள் வெறி பிடித்து திரியவில்லை. நீங்கள் நல்லதை நினைத்து நல்லது செய்திருந்தால் அந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கும். உங்கள் எண்ணமும் நல்லது கிடையாது, உங்கள் நினைப்பும் நல்லது கிடையாது, அதனால் உங்களுக்கு நல்லது நடக்காது. அ.தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் நாட்டு மக்களுக்கு நன்மை செய்கின்ற இயக்கம். பாராளுமன்ற மேலவை உறுப்பினராக சிறுபான்மையினத்தைச் சார்ந்த முகமத் ஜான் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார். அவர் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் தான். அவருக்கு ஒரு வாய்ப்பை இந்த அ.தி.மு.க. வழங்கியிருக்கிறது. அதே போன்று தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சந்திரசேகரனும் பாராளுமன்ற மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இது ஒரு ஜனநாயக கட்சி. ஆனால் தி.மு.க. போன்று அவர்களது கைத்தடிகளுக்கு பதவி வழங்குவதில்லை. சட்டமன்றத்திலே தி.மு.க. உறுப்பினர்கள் உதயநிதி புகழ் பாடிக்கொண்டிருக்கிறார்கள் என்றால், கட்சியில் இதுவரை உழைத்தவர்களுக்கு என்ன மரியாதை உள்ளது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகளுக்கு என்ன பிரச்சனை என்பதை நன்கு தெரிந்தவன். அதற்கு ஏற்றாற் போல் தான் இந்த அரசு விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒரு சாதாரண விவசாயி இந்த நாட்டை ஆள்வதை, ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. விவசாயிகளுக்கு என்றென்றும் பாதுகாப்பாக இருப்பது அம்மாவின் அரசு.
சட்டமன்ற இடைத்தேர்தலில் நாங்கள் உண்மையான வாக்குறுதிகளை அளித்து 9 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். அவர்கள் பொய்யான வாக்குறுதிகளைக் அளித்து 13 தொகுதியில் வெற்றி பெற்றார்கள். விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.6000 என ஆண்டுக்கு ரூ.72000 வழங்குவோம் என தெரிவித்தார்கள். நாட்டின் மொத்த பட்ஜட் தொகையை ஒதுக்கினாலும் கூட கொடுக்க இயலாது. வங்கியில் 5 பவுனுக்கு குறைவாக அடகு வைத்த நகைக் கடன் தள்ளுபடி. மற்றும் கல்விக் கடன் அத்தனையும் ரத்து செய்யப்படும் போன்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்து வாக்குகளைப் பெற்றார்கள். தற்போது மத்தியிலும் ஆட்சி இல்லை, மாநிலத்திலும் ஆட்சியில்லை கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றுவார்கள். இங்கு வந்திருக்கும் அனைவரும் அம்மா அரசால் வழங்கப்படும் ஏதேனும் ஒரு நலத்திட்டத்தினை கண்டிப்பாக பெற்றிருப்பீர்கள்.
அதிக அளவில் உணவு தானிய உற்பத்தி செய்வதற்காக ‘கிரிஷ் கர்மா விருது’ பெற்று தமிழ்நாடு வேளாண்மையில் முதலிடம் வகிக்கிறது. இந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொது மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஒரு சில அறிவிப்புகளை இங்கு வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். கே.வி. குப்பத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்கப்படும். வேலூர் மாவட்டத்தில் விடுபட்ட இடங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். கே.வி.குப்பம் - கவசம்பட்டில் பாலாற்றின் குறுக்கே தரை தடுப்பணை அமைக்கப்படும். குடியாத்தம் தொகுதி தட்டபாறை - மீனூர் இடையே கௌண்டன்யா நதியின் குறுக்கே புதிய பாலம் கட்டப்படும். எனவே, இது போன்ற எண்ணற்ற திட்டங்கள் இந்த தொகுதியில் நிறைவேற்றிடும் வகையில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் ஏ.சி. சண்முகத்திற்கு எம்.ஜி.ஆர். அம்மா ஆகியோர் கட்டிக்காத்த வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்திலே வக்களித்து அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.