முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தண்ணீர் தட்டுப்பாடே இல்லை என்ற நிலைய உருவாக்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஏரி, குளங்களை தூர் வாரி தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடே இல்லை என்கின்ற நிலையை வரும் காலங்களில் உருவாக்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மழைக்காலம் தொடங்கி இருக்கும் இந்த நேரத்தில் தமிழக அரசு உடனடியாக நீர் நிலைகளை தூர்வார அதிக கவனம் செலுத்தி மழை நீரை சேமிக்க அக்கறை காட்ட வேண்டும். மதுராந்தகம் ஏரி போன்ற மிக முக்கியமான ஏரிகள் அந்தந்த பகுதி மக்களுக்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது. அதுபோல் அனைத்து ஏரி மற்றும் குளங்களை தூர் வாரி தடுப்பணைகளை சீர்படுத்தி மழைநீரை சேமிக்க தமிழக அரசு உடனடியாக துரித நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

மேலும் பல கோடி ரூபாய் மழைநீர் சேமிப்புக்காகவும், தடுப்பணைகள் அமைப்பதற்காகவும் தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி இருக்கும் இந்த அரசு, மழைக்காலம் தொடங்கி இருக்கின்ற இந்த நேரத்தில் உடனடியாக ஏரிகளை தூர் வாரி தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடே இல்லை என்கின்ற நிலையை வரும் காலங்களில் உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து