முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகராஷ்டிராவில் பதவி விலகிய தேசியவாத காங். 3 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்

புதன்கிழமை, 31 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

மும்பை : மகராஷ்டிராவில் நேற்று முன்தினம் பதவி விலகிய தேசியவாத காங்கிரசை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தனர்.

மகராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இதற்கிடையே, மகராஷ்டிரா சட்டசபைக்கு வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கியதை தொடர்ந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆளும் பா.ஜ.க., சிவசேனா கட்சிகளில் ஐக்கியமாகி வருகின்றனர். இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மும்பை வடாலா தொகுதி எம்.எல்.ஏ. காளிதாஸ் கோலம்கர் நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வைபவ் பிச்சாத், சிவேந்திர ராஜே போசலே, சந்தீப் நாயக் ஆகியோரும் தஙகளது பதவியை ராஜினாமா செய்தனர். இவர்கள் சபாநாயகர் ஹரிபாவு பாகடேவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். இந்நிலையில், பதவி விலகிய தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் நேற்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பா.ஜ.க.வில் தங்களை இணைத்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து