முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.என்.பி.எல்: கோவை அணியை வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் வெற்றி

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

திண்டுக்கல் : டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கோவை கிங்ஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது.

தமிழ்நாடு பிரிமீயர் கிரிக்கெட் தொடரின் 18-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் மதுரை பாந்தர்ஸ் - கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கோவை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, மதுரை அணியின் தொடக்க வீரர்களாக கார்த்திக் மற்றும் சரத்ராஜ் களமிறங்கினர். கார்த்திக் 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஆனால் மறுமுனையில் சிறப்பாக ஆடிய கார்த்திக் 61 பந்துகளில் 4 சிக்சர்கள் உட்பட 106 ரன்கள் விளாசினார். இறுதியில் அதிரடியாக ஆடிய அந்த அணியின் கௌசிக் 23 பந்துகளில் 43 ரன்கள் அடித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு மதுரை பாந்தர்ஸ் அணி 195 ரன்கள் எடுத்தது.

கோவை அணி தரப்பில் அஜித் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  இதையடுத்து, 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கோவை அணியின் தொடக்க வீரர்கள் ஷாருக்கான் 24 ரன்னிலும், அனிருதா 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சற்று நிலைத்து நின்று ஆடிய அணியின் கேப்டன் முகுந்த் அதிகபட்சமாக 50 ரன்கள் அடித்தார்.

இறுதியில், கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கோவை கிங்ஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது. மதுரை அணி தரப்பில் செல்வகுமரன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து