முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விபச்சார விடுதி தொடங்க மகனின் சிகிச்சை பணத்தை திருடிய தந்தை கைது

சனிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

பிரேசிலா : மரணப்படுக்கையில் இருக்கும் 2 வயது மகனின் சிகிச்சைக்காக இருந்த பணத்தை திருடி விபசார விடுதி தொடங்கிய தந்தை கைது செய்யப்பட்டார்.

பிரேசில் நாட்டின் சால்வடார் பகுதியில் குடியிருக்கும் 37 வயதான மேட்டஸ் ஆல்வ்ஸ் என்பவரின் 19 மாதமே ஆன குழந்தை அரியவகை நோயால் அவதிப்பட்டு வந்தது.  தற்போது குழந்தையின் சிகிச்சைக்காக சுமார் 216,000 பவுண்டுகள் வங்கியில் சேமித்து வைத்துள்ளனர். இந்த தொகையானது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் பொதுமக்களிடம் இருந்து சேகரித்தது எனவும் கூறப்படுகிறது. மேலும், இந்த தொகையானது 3 முறை சிகிச்சைக்கான மருந்து வாங்கவே போதுமானதாக உள்ளது எனவும் கூறப்படுகிறது.

தற்போது அந்த பணத்தில் இருந்து சுமார் 130,000 பவுண்டுகள் அளவு பணத்தை தந்தை ஆல்வ்ஸ் திருடி சென்று செலவிட்டுள்ளார். விலை மாதர்களுடனும், போதை மருந்துக்கும், மதுவுக்கும் அந்த பணத்தை செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், தலைமறைவாக இருந்த அவரை ஜூலை 22 -ம் தேதி கைது செய்துள்ளனர். விசாரணையில், அந்த பணத்தில் சுமார் 11,000 பவுண்டுகளை விபசார விடுதி ஒன்றை துவங்க நண்பர்களுடன் முதலீடு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், விலை உயர்ந்த பொருட்களும், போதை மருந்தும் வாங்கி பயன்படுத்தியுள்ளதாக அவர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து