முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமாஜ்வாடியில் இருந்து வெளியேறிய நீரஜ் சேகர் பா.ஜ.க. சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டி

புதன்கிழமை, 14 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

லக்னோ : முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீரஜ் சேகர் பா.ஜ.க. சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீரஜ் சேகர். இவர் சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடையும் நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை மாநிலங்களவைத் தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு ஏற்றுக் கொண்டார்.

பதவி விலகிய நீரஜ் சேகர் பா.ஜ.க.வில் இணையவுள்ளதாகவும் அவர் மீண்டும் பா.ஜ.க. சார்பில் உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகின. அதன்படியே அவர் பா.ஜ.க.வில் இணைந்தார். நீரஜ் சேகரின் ராஜினாமாவால் மாநிலங்களவையில் சமாஜ்வாதி கட்சியின் பலம் 9 ஆக குறைந்தது. இந்த நிலையில் எதிர்பார்த்தபடியே, தான் ராஜினாமா செய்ததால் காலியான இடத்தில் நீரஜ் சேகர் பா.ஜ.க. சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் நேற்று  தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட பா.ஜ.க. நிர்வாகிகள் உடன் வந்தனர். உத்தர பிரதேச சட்டப்பேரவையில் பா.ஜ.க.வுக்கு அதிகமான பெரும்பான்மை உள்ளது. எனவே நீரஜ் சேகர் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து