முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாங்காங் எல்லையில் சீனா படைகளை குவிக்கிறது: அதிபர் டிரம்ப் சொல்கிறார்

வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

ஹாங்காங் எல்லையில் சீனா படைகளை குவித்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. போராட்டங்களின் போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை மூள்வதால் ஹாங்காங் கலவர பூமியாக மாறி வருகிறது.

இந்த நிலையில் ஹாங்காங் எல்லையில் சீனா தனது ராணுவ படையை குவித்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். பென்சில்வேனியா மாகாணத்தில் கட்டுமான தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றிய போது ஹாங்காங் போராட்டம் குறித்து டிரம்ப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஹாங்காங்கில் தற்போது மோசமான நிலை நீடிக்கிறது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். யாரும் இதில் காயம் அடைய மாட்டார்கள் என்று நம்புகிறேன். யாரும் கொல்லப்பட மாட்டார்கள் என்று நம்புகிறேன். ஹாங்காங்கின் எல்லையில் சீனா தனது படையை குவித்து வருவதை நமது உளவுத்துறை உறுதிப்படுத்தி இருக்கிறது. அனைவரும் பொறுமையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து