முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பறவைகள் மோதியதால் சேதமடைந்த விமானம் அவசரமாக தரையிறக்கம்

வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

ரஷ்யாவில் பறவைகள் மோதியதில் விமானத்தில் சேதம் ஏற்பட்டது. இதனால், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ரஷ்யாவில் 226 பயணிகள் மற்றும் 7 விமான சிப்பந்திகளுடன் சென்று கொண்டிருந்த உரல் ஏர்லைன்ஸ் விமானம், பறவைகள் மோதியதில் சேதம் அடைந்தது. விமானத்தின் என்ஜின் பகுதியில் சேதம் ஏற்பட்டதால், விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. மாஸ்கோ விமான நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள ஒரு விவசாய நிலப்பரப்பில் விமானம் தரையிறங்கியது. இதில், விமானத்தில் பயணித்த 23 பேர் லேசான காயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக பெரும் சேதம் ஏற்படவில்லை. சுவோஸ்கி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் சிம்பெரோபோல் விமான நிலையத்திற்கு செல்ல இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து