முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் பகுதியில் 73வது சுதந்திர தினவிழா:தேசியக் கொடியேற்றி கோலாகல கொண்டாட்டம்:

வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் நாட்டின் 73வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் தேசியக் கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கி கோலாகல கொண்டாட்டங்கள் உற்சாகத்துடன் நடைபெற்றது.
நாட்டின் 73வது சுதந்திர தினவிழாவினை முன்னிட்டு திருமங்கலம் பகுதியில் உற்சாகத்துடன் நடைபெற்ற கோலாகல கொண்டாட்டங்களின் விபரம் பின்வருமாறு: திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் திருமங்கலம் ஆர்.டி.ஓ.,முருகேசன் தேசியக் கொடியேற்றி வைத்து அலுவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கினார்.திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் வட்டாரவளர்ச்சி அலுவலர் சூரியகாந்தி தேசியக்   தேசியக்கொடியேற்றி வைத்து அலுவலர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.அப்போது ஊராட்சி ஒன்றிய அதிகாரி உதயகுமார் மற்றும் உதவி வட்டார வளர்;ச்சி அலுவலர்கள் பணியாளர்கள் உடனிருந்தனர்.இதையடுத்து திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவிற்கு நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா தலைமையேற்று தேசியக் கொடியேற்றிவைத்து  அலுவலர்களுக்கும் நகராட்சி பள்ளி குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கினார்.இவ்விழாவில் நகராட்சி பொறியாளா ; சகத்திவேல்,சுகாதார அலுவலர் சீனிவாசன் மற்றும் நகராட்சி அலுவலர்கள்,பணியாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.திருமங்கலம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் தலைமை மருத்துவர் டாக்டர்.பூமிநாதன் தேசியக் கொடியைஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.
இதையடுத்து திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் தாசில்தார் தனலட்சுமி  தேசியக்கொடியேற்றி வைத்து அலுவலர்களுக்கும்,பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கினார். இதையடுத்து திருமங்கலம் கிளைச் சிறையில் நடைபெற்ற சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் தாசில்தார் தனலட்சுமி கலந்து கொண்டு சிறையிலுள்ள விசாரணை கைதிகளுக்கு இனிப்புகளையும்,காலை  உணவையும் வழங்கினார்.திருமங்கலம் நகர் கிளை நூலகத்தில் திருமங்கலம் ரோஸ் அரிமா சங்கத்தின் தலைவர் வேம்புவேந்தன் கலந்து கொண்டு தேசியக் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.கிளை நூலகர் த.இளங்கோ வாசகர் வட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நூலகர் சு.வே.மலர்விழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதனை தொடர்ந்து திருமங்கலம் பி.கே.என்.கலை அறிவியல் கல்லூரி மற்றும் பி.கே.என் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் தேசியக் கொடியேற்றப்பட்டு மாணவ,மாணவிகளுக்கு இனிப்புகள் வழஙகப்பட்டது.மேலும் பள்ளி கல்லூரி வளாகங்களில் மரக்கன்றுகளும் நடப்பட்டது.இதே போன்று திருமங்கலம் நகரிலுள்ள அனைத்து காவல் நிலையங்கள்,அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள்,தனியார் மற்றும் அரசு கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்,தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தேசியக் கொடியேற்றி நாட்டின் 73வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து