எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஞ்சீபுரம் : அத்திவரதர் தரிசனம் நிறைவடைந்ததை தொடர்ந்து, அத்திவரதர் சிலை நேற்று மீண்டும் கோவில் குளத்துக்குள் வைக்கப்படுகிறது.
கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்துக்குள் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் அத்திவரதர் வைபவம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் அங்குள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஜூலை 31-ந்தேதி வரை சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர், பின்னர் கடந்த 1-ந்தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி அளித்தார்.
வாழ்க்கையில் அபூர்வமாக கிடைக்கும் தரிசனம் என்பதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், கேரளா, மராட்டியம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து அத்திவரதரை தரிசித்தனர். அத்திவரதரை சயன கோலத்தில் 43 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அப்படி தரிசனம் செய்தவர்களில் பலர், அவர் நின்ற கோலத்தில் அருள்பாலித்த போதும் அவரை தரிசிப்பதற்காக வந்தனர். பொதுதரிசன வரிசையில் பல மணி நேரம் காத்து நின்று மக்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், கலையுலகைச் சேர்ந்தவர்கள் என ஏராளமான முக்கிய பிரமுகர்களும் வந்து அத்திவரதரை தரிசித்தனர்.
முதல் 4 நாட்கள் கூட்டம் ஓரளவுதான் இருந்தது. அதன் பின்னர் தினமும் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. விடுமுறை நாட்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. அதிகபட்சமாக 5 லட்சம் பேர் வரை ஒரு நாளில் தரிசனம் செய்து இருக்கின்றனர்.
தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்ததால் காஞ்சீபுரம் நகரமே விழாக்கோலம் பூண்டது. விடுமுறை நாட்களில் கட்டுக்கடங்காத பக்தர்கள் திரண்டனர். இதனால் போலீசார் பக்தர்களை பகுதி பகுதியாக பிரித்து தரிசனத்துக்கு அனுப்பினார்கள்.
கடைசி மற்றும் 47-வது நாளான நேற்று அத்திவரதருக்கு ரோஜா மற்றும் மஞ்சள் நிற பட்டாடை உடுத்தி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலை 5.45 மணிக்கு நடை திறக்கப்பட்டு கடைசி நாள் தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு அத்திவரதர் அருள்பாலித்தார்.
கடைசி நாளான நேற்றும் அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக காலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் திணறினார்கள்.
முக்கிய பிரமுகர்களுக்கான தரிசனம் நேற்று முன்தினத்தோடு முடிவுக்கு வந்ததால், நேற்று பொது தரிசனம் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வந்த பக்தர்கள், குறிப்பிட்ட இடத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு சுமார் 5 கி.மீ. தூரம் நடந்து சென்று நீண்ட வரிசையில் 9 மணி நேரம் காத்து நின்று அத்திவரதரை தரிசித்தனர்.
கடைசி நாளான நேற்று இரவு 9 மணி வரை சுமார் 4 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இரவு 9 மணி அளவில் ராஜகோபுர வாசல் மூடப்பட்டது. அப்போது கோவில் வளாகத்திற்குள் காத்திருந்த பத்தர்கள் மட்டும் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். இரவில் நீண்ட நேரம் தரிசனம் நீடித்தது. அதன்பின்னர் நேற்று இரவுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவடைந்தது.
நேற்று வரை அத்திவரதரை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று (சனிக்கிழமை) அதிகாலை அத்திவரதருக்கு பரிகார பூஜை தொடங்குகிறது. அடுத்த 40 ஆண்டுகளுக்கு சிலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் சாம்பிராணி தைலம் உள்ளிட்ட மூலிகை திரவியங்கள் அத்திவரதர் சிலைக்கு பூசப்படுகிறது.
இன்று இரவு 10 மணியில் இருந்து 12 மணிக்குள் அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்துக்குள் வைக்கப்படுகிறது. குளத்தில் உள்ள அத்திவரதர் மண்டபத்தின் கீழ் உள்ள அறையில் அத்திவரதர் சிலை வைக்கப்படும். அதன்பிறகு குளத்தில் வழக்கம்போல் நீர் நிரப்பப்படும். அனந்தசரஸ் குளத்தில் ஜலவாசம் செய்யும் அத்திவரர், 40 ஆண்டுகளுக்கு 2059-ம் ஆண்டு மீண்டும் அருள்பாலிக்க வருவார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.