முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் ராணுவ பயிற்சியை முடித்து டெல்லி திரும்பினார் மகேந்திர சிங் டோனி

சனிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி : காஷ்மீரில் ராணுவத்தினருடன் இணைந்து ரோந்து பணி சென்ற இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி நேற்று பயிற்சி முடிந்து டெல்லி திரும்பினார்.

நியூசிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்ததிலிருந்து டோனியின் எதிர்காலம் குறித்த ஊகங்கள் தீவிரமடைந்தன. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ. தேர்வு செய்தவுடன், டோனியின் எதிர்கால திட்டங்கள் குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கும் என கூறப்பட்டது. இதற்கிடையே, டோனி, துணை ராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய விளையாட்டிலிருந்து இரண்டு மாத ஓய்வு எடுப்பதாக பி.சி.சி.ஐ.க்கு தெரிவித்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.

இதையடுத்து, பிராந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்ட்டில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கு எம்.எஸ்.டோனி கடந்த மாதம் 31-ம் தேதி காஷ்மீர் சென்றார். அங்கு ராணுவ குழுவினருடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டார். இந்நிலையில், காஷ்மீரில் ராணுவத்தினருடன் இணைந்து ரோந்து பணிக்கு சென்ற எம்.எஸ்.டோனி ராணுவ பயிற்சியை முடித்தார். காஷ்மீரின் உரி, அனந்தநாக் பகுதிகளுக்கும் சென்று பணிகளை ஆற்றினார். இதையடுத்து அவர் நேற்று தலைநகர் டெல்லி திரும்பினார் என அதிகாரிகள் தெரிவித்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து