முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீநகரில் பல இடங்களில் வன்முறை: மீண்டும் அமலுக்கு வந்தது கட்டுப்பாடுகள்

ஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் : காஷ்மீரின் ஸ்ரீநகரில் நேற்று பல்வேறு இடங்களில் திடீர் வன்முறை சம்பவங்களும், கல்வீச்சு சம்பவங்களும் நடந்ததால் மீண்டும் கட்டுப்பாடுகளை பாதுகாப்பு படையினர் விதித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் 5 மாவட்டங்களில் மிகக்குறைந்த அலைவரிசை கொண்ட 2 ஜி செல்போன் சேவை அனுமதிக்கப்பட்ட நிலையில் பல்வேறு வதந்தி்கள் பரப்பப்பட்டதால் அந்த சேவையையும் பாதுகாப்பு அதிகாரிகள் ரத்து செய்தனர்.

சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மெதினாவுக்கு ஹஜ் புனித பயணம் சென்று நேற்று ஏராளமான பயணிகள் காஷ்மீருக்கு திரும்பினர். இவர்களை வரவேற்க கூட அவர்களின் உறவினர்கள் செல்ல முடியாத அளவுக்கு கட்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனால் விமான நிலையத்தில் இருந்து அரசுப் பேருந்து மூலம் பாதுகாப்பாக ஹஜ் பயணிகள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அரசியலமைப்பு 370 பிரிவையும் திரும்பப் பெற்றது. மாநிலத்தை இரண்டாகப் பிரித்து லடாக், ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாகவும் அறிவித்தது. இந்த நடைமுறையால் மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் ஏதும் நடக்காமல் தவிர்க்கும் பொருட்டு கடந்த 14 நாட்களாக கடும் கட்டுப்பாடுகளை போலீசார், பாதுகாப்பு படையினர் நடைமுறைப்படுத்தியுள்ளனர். இந்த 14 நாட்களாக மாநிலத்தில் செல்போன், தொலைபேசி சேவை, மருத்துவனை, வங்கிகள், அரசு அலுவலகங்கள் முடக்கப்பட்டன, தொலைக்காட்சி சேனல்கள் எதுவும் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டது. மக்கள் கூட்டமாக வெளியே செல்லவும் ஒன்று கூடவும் அனுமதிக்கப்படவில்லை.

ஈகை பண்டிகைக்கு முன்பாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் கடைகளுக்கும், மசூதிகளுக்கும் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. அதன் பின் பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டு தொலைபேசி, செல்போன் இணைப்புகள் 5 மாவட்டங்களுக்கு தரப்பட்டன. குறிப்பாக ஜம்மு, சம்பா, கதுவா, உதம்பூர், ரேசாய் ஆகிய 5 மாவட்டங்களுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை முதல் குறைந்த சக்தி அலைவரிசையான 2 ஜி சேவை மட்டும் தரப்பட்டது. இருப்பினும் யாரேனும் வதந்திகள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து இருந்தனர். ஆனால், அதையும் மீறி சில விஷமிகள் செல்போனில் வதந்திகளையும், சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் வதந்திகளை சிலர் பரப்பியதால், செல்போன் சேவையையும் நேற்று முன்தினம் இரவு முதல் போலீசார் ரத்து செய்தனர்.

இந்நிலையில் ஸ்ரீநகரின் 12-க்கும் மேற்பட்ட பகுதிகளிலும் நேற்று காலை முதல் திடீர் வன்முறைச் சம்பவங்களும், கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன. வன்முறையாளர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதில் ஏராளமானோர் காயமடைந்தனர். ஆனால், எத்தனை பேர் காயமடைந்தார்கள் என்பதை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. இந்த வன்முறைச் சம்பவத்தை தொடர்ந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை வாபஸ் பெற்றும், மீண்டும் கடும் கட்டுப்பாடுகளை போஸீலார் கொண்டு வந்தனர். இதனால் மீண்டும் பாதுகாப்புபடையினர் பிடிக்குள் ஸ்ரீநகர் வந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து