முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்படும் - கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூர்,  : கர்நாடகாவில், தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்படும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் முந்தைய ம.ஜ.த.- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது முக்கிய அரசியல் தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பா.ஜ.க. முன்னாள் துணை முதல்வர் ஆர். அசோக் வலியுறுத்தினார். அதே போல் இந்த விவகாரத்தில் பா.ஜ.க. அரசு தாராளமாக விசாரணை நடத்தலாம் எனவும் முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். 

இது குறித்து பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா,

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் விசாரணை நடத்த முன்னாள் முதல்வர் சித்தராமையா உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் கர்நாடக மக்களும் உண்மையை அறிய விரும்புகிறார்கள். அதனால் இந்த விவகாரம் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து