முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி விபத்தில் உயிரிழந்த எட்டு பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் உத்தரவு - பலத்த காயமடைந்தோருக்கு தலா ரூ. 50, 000 வழங்க ஆணை

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : திருச்சியில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்த எட்டு பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்கவும், பலத்த காயமடைந்தோருக்கு சிறந்த சிகிச்சை வழங்க தலா ரூ. 50 ஆயிரம் வழங்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் பேரூர் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் பதினெழு நபர்கள் சிறுநாவலூர் கிராம மஜரா, புதூர் கிராமத்தில் நடைபெறும் விழாவிற்கு தனியார் வாகனத்தில் சென்ற போது, எதிர்பாராதவிதமாக வாகனம் கிணற்றில் கவிழ்ந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் பேரூர் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைவேல் என்பவரின் மகன் . குணசீலன், ஞானசீலன் மனைவி குமாரத்தி, தனபால் என்பவரின் மனைவி கோமதி, முருகேசன் மனைவி கயல்விழி, இளங்கோவன் என்பவரின் மகள் யமுனா, மகன் சரண், முருகேசன் என்பவரின் மகள் சிறுமி சஞ்சனா மற்றும் குணசீலன் என்பவரின் மனைவி எழிலரசி ஆகிய எட்டு நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்த எட்டு நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த கோர விபத்து குறித்து அறிந்த உடன் மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டேன். இந்த விபத்தில் காயமடைந்த 9 நபர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டேன். இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்து கொடுக்கவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திந்து அவர்களுக்கு ஆறுதல் கூறவும், சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு நான் உத்தரவிட்டிருந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த எட்டு நபர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து