எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் அனைவருக்கும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்றும் பேரூராட்சிப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டித்தரநடவடிக்கை மேற்கொள்வோம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்து நலத்திட்டஉதவிகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் இருக்கின்ற ஏழை, எளிய மக்களின் குறைகளை விரைந்து தீர்ப்பதற்கு அரசு அதிக முன்னுரிமை கொடுத்து, முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மனுதாரர்களின் தகுதியான மனுக்களுக்கு நிவர்த்தி காணப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். வீடில்லாத ஏழை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதை லட்சியமாக எண்ணி அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், மத்திய, மாநில அரசுகள் இணைந்து வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் வீடில்லா மக்கள் அனைவருக்கும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். பேரூராட்சிப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனை விரைவாக செயல்படுத்த அரசு திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
பொதுப்பணித் துறை மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் 39,000 ஏரிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஏரிகளை எடுத்து தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும். ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்கள், குட்டைகள், ஊரணிகளில் தண்ணீரை சேமிக்க ரூபாய் 1,250 கோடி மதிப்பீட்டில் திட்டம் தீட்டப்பட்டு, அப்பணிகளும் துவங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால், பொழிகின்ற மழை நீர் சேமிக்கப்படுவதுடன், நிலத்தடி நீர் உயரக் கூடிய வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. உடலுக்கு உயிர் முக்கியம் போல் விவசாயத்திற்கும், மக்களுக்கும் நீர் முக்கியம். எனவே, இத்திட்டத்தில் விவசாயப்பெருங்குடி மக்களும், விவசாயத் தொழிலாளர்களும், பொதுமக்களும் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். கண்ணுக்கு இமை போல ஏரிக்கு இமையாக இருந்து இத்திட்டம் வெற்றியடைய ஒத்துழைக்க வேண்டும்.
ஓடைகள், நதிகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதற்கு 3 ஆண்டு காலத் திட்டமாக ரூபாய் 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இரண்டாண்டு காலத்தில் தடுப்பணை கட்டுவதற்கு ரூபாய் 600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள்நடைபெற்று கொண்டிருக்கின்றது. சுகாதாரத் துறையின் மூலம் ரூ.97 லட்சம் மதிப்பீட்டில் 4 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் மற்றும் 239 கி.மீ. சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், ரூ.10 கோடி மதிப்பீட்டில் சாலைகளை அகலப்படுத்தி புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ. 25,000 நிதியுதவியுடன் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2,241 பயனாளிகளுக்கு ரூ. 5.60 கோடி நிதியுதவியும், 9,828 கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பட்டம், பட்டயம் படித்த ஏழை பெண்களுக்கு ரூ. 50,000 நிதியுதவியிடன் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 1,526 பயனாளிகளுக்கு ரூ. 7.63 லட்சம் நிதியுதவியும், 7,172 கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 917 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல திட்டங்களை மக்களுக்காக அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது. ஆனால், எதிர்க்கட்சிகள் அரசுக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக வேண்டுமென்றே, திட்டமிட்டு தவறான பொய்யான செய்தியை பரப்பி வருகின்றார்கள். அ.தி.மு.க. அரசு மக்களின் அரசு, மக்களுக்கான திட்டங்களை அளிப்பது தான் லட்சியம். அந்த லட்சியப் பாதையில் அ.தி.மு.க. அரசு சென்று கொண்டிருக்கின்றது. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோர் கொண்டு வந்த திட்டங்களை சிந்தாமல் சிதறாமல் மக்களின் இல்லங்களுக்கு கொண்டு சேர்க்கின்ற அளவிற்கு அரசு செயல்பட்டு கொண்டிருக்கின்றது.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 hours 1 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி3 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 23 hours ago |
-
தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குபதிவு நடத்த தமிழிசை கோரிக்கை
20 Apr 2024சென்னை : தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
20 Apr 2024சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
பிரியங்காவின் உதவியாளர் பா.ஜ.,வில் இணைந்தார்
20 Apr 2024புதுடில்லி: காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்காவின் நெருங்கிய உதவியாளர் தஜிந்தர் சிங், அக்கட்சியில் இருந்து விலகி, சில மணி நேரங்களிலேயே பா.ஜ.,வில் இணைந்தார்.
-
திருச்சூரில் கோலாகலமாக நடந்த பூரம் திருவிழா: குடை மாற்றும் நிகழ்வை கண்டுகளித்த பக்தர்கள்
20 Apr 2024திருச்சூர், திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலமாக நடந்தது. இந்நிகழ்வில் குடை மாற்றும் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
-
நடுவானில் வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்: கென்யாவில் ராணுவ தளபதி உள்பட 10 பேர் உயிரிழப்பு
20 Apr 2024நைரோபி, கென்யாவில் நடுவானில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறிய விபத்தில் ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியானார்கள்.
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
-
அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும்: ராகுல் காந்தி
20 Apr 2024பாட்னா : அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும் என்று பீகாரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசினார்.
-
எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
20 Apr 2024வாஷிங்டன், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
சனாதனம் பற்றிய உதயநிதி பேச்சு: தெலுங்கானா முதல் கண்டனம்
20 Apr 2024ஐதராபாத், சனாதனம் பற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
மகாவீர் ஜெயந்தியையொட்டி செல்வப்பெருந்தகை வாழ்த்து
20 Apr 2024சென்னை : மகாவீர் ஜெயந்தியையொட்டி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு
-
தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணியே இருக்காது: மகராஷ்டிராவில் பிரதமர் மோடி பேச்சு
20 Apr 2024மும்பை, தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணி சரிந்து விழும்.
-
வாக்குச்சாவடியில் விதிமீறல் ? நடிகர் விஜய் மீது புகார்
20 Apr 2024சென்னை, வாக்குச்சாவடியில் விதிமீறல்.? - த.வெ.க. தலைவர் விஜய் மீது புகார்
-
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் ஏவுகணையை வழங்கிய இந்தியா
20 Apr 2024மணிலா, ஒப்பந்தத்தின்படி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா நேற்று வழங்கியுள்ளது.
-
மதுபான கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
20 Apr 2024புது டெல்லி, மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகள்
-
இட ஒதுக்கீட்டு கொள்கை குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கருத்து
20 Apr 2024புது டெல்லி, நாங்களும் இட ஒதுக்கீட்டு கொள்கையை தொட மாட்டோம்.
-
அழகர்கோவிலில் சித்திரை திருவிழா தொடக்கம்: அழகர்மலையிலிருந்து மதுரைக்கு இன்று கள்ளழகர் புறப்படுகிறார் : மூன்றுமாவடியில் நாளை எதிர்சேவை
20 Apr 2024மதுரை : மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவில் சித்திரைத் திருவிழா கோலாகலமாகத் தொடங்கிய நிலையில் இன்று (ஏப். 21) மாலை அழகர்மலையிலிருந்து மதுரைக்கு கள்ளழகர் புறப்படுகிறார்.
-
பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைத்தால் தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
20 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் வென்று பாஜக ஆட்சியமைத்தால் வல்லுநர்களுடனான முறையான ஆலோசனைக்குப் பிறகு, தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்களிக்காதவர்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
20 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 1.90 கோடி பேர் வாக்களிக்கவில்லை என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
-
இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு: ராபா நகரில் 9 பேர் உயிரிழப்பு
20 Apr 2024ராபா, காஸா : காஸாவின் தென் பகுதியிலுள்ள நகரான ராஃபா மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்கியதில் 6 குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
-
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு அதிகரித்துள்ள, குறைந்த தொகுதிகளின் விவரம்
20 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஒரு சில தொகுதிகளில் வாக்கு பதிவு சதவீதம் அதிகரித்த நிலையில், ஒரு சில தொகுதிகளில் கடந்த தேர்தலை விட குறைவா