எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : வாழ்வில் ஒரு லட்சியத்துடன் வாழ்ந்து, பெண்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னுக்கு வர ஒரு தூண்டுகோலாகத் திகழவேண்டும் என்று கல்லூரி மாணவியருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை கூறினார்.
ஈரோடு வேளாளர் கல்வி நிறுவனங்களின் பொன்விழாவை துவக்கி வைத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது.,
"கற்கை நன்றே கற்கை நன்றேபிச்சை புகினும் கற்கை நன்றே" என்று வெற்றிவேற்கை தெரிவிக்கிறது. ஒருவன் செல்வம் இல்லாதவனாக மிகவும் ஏழ்மை நிலையை அடைந்தாலும் கல்வி கற்க முயல வேண்டும். இதனை கூறுகையில் எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.
மதராஸ் செனட் ஹவுஸ் 1898-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில், கொஞ்சம் பதற்றத்துடன் அமர்ந்திருந்தார் ஒற்றை பெண்மணி. தென்னிந்தியாவின் முதல் பெண் பட்டதாரி என்கிற அறிமுகத்துடன் அவரது பெயர் அழைக்கப்பட, தடுமாறி மிகுந்த பயத்துடன் மேடை ஏறினார். அவரை பல்கலைக்கழக வேந்தரிடம் அறிமுகம் செய்து வைத்தார் கல்லூரி பேராசிரியர். அந்தப் பெண் பி.ஏ.பட்டப் படிப்பிற்கான சான்றிதழ் பெறும் சமயம் அந்த அரங்கமே கரகோஷத்தில் அதிர்ந்தது. அவர்தான் கமலா ரத்தினம் சத்தியநாதன் அவர்கள்.
1879-ஆம் ஆண்டு ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த கமலா ரத்தினம் சத்தியநாதன் பள்ளிபடிப்பு முடிந்தவுடன் இளங்கலை வகுப்பில் பயின்றதன் மூலம் சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முதல் பட்டதாரி பெண் ஆவார்.
பின்னர் இவர் சத்தியநாதன் என்ற ஒரு பேராசிரியரை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்கு பின்னர் சென்னை ராயப்பேட்டை பகுதியில் வசித்து வந்தார். அவரது கணவரின் தூண்டுதலின்படி 1901-ஆம் ஆண்டு எம்.ஏ.தேர்வு எழுதி ‘தென்னிந்தியாவின் முதல் முதுகலைப் பெண் பட்டதாரியானார்’. பின்னர், இவர் 1901-ஆம் ஆண்டு ‘இந்தியன் லேடீஸ் மேகசீன்’ என்ற பத்திரிகையை தொடங்கினார். இந்தியாவில் பெண் ஒருவரால் தொடங்கப்பட்டு நடத்தப்பட்ட முதல் பெண் பத்திரிகை இதுவே. பின்னர் இவரது வாழ்க்கையில் சோதனைகளாக குடும்பத்தில் பல இழப்புகள் ஏற்பட்டன. அதனைக் கண்டு மனம் தளராமல் 1919-ஆம் ஆண்டு தனது குழந்தைகளுக்கு சிறந்த கல்வி வேண்டும் என்பதற்காக தனது வீட்டை விற்று, இங்கிலாந்து நாட்டுக்கு தனது குழந்தைகளுடன் சென்றார். இங்கிலாந்தில் அவரது மகன் இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறும் வரை இருந்து பின்னர் நாடு திரும்பினார். தன் மகனுடன் இந்தியா முழுக்க ஒரு கலெக்டரின் தாய் என்ற அடையாளத்துடன் பயணம் செய்தார்.
பெண்கள் கல்வி கற்கவே கூடாது என்று எதிர்ப்பு இருந்த அந்தக் காலத்திலேயே, அந்த எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களைப் பெற்றதோடு மட்டுமல்லால், பெண்கள் உரிமையை காக்க பத்திரிகை நடத்தி, மகளிருக்காக சமூக நிறுவனங்களை நிறுவிய கமலா சத்தியநாதன் போன்று நீங்களும் வாழ்வில் ஒரு லட்சியத்துடன் வாழ்ந்து, பெண்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னுக்கு வர ஒரு தூண்டுகோலாகத் திகழவேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மாணவிகள் படிக்கும்போது அவர்கள் கவனம் முழுவதும் படிப்பில்தான் இருக்கவேண்டும். உங்களது பெற்றோர்கள் உங்கள் வாழ்வு சிறக்க பல கனவுகள் காண்கின்றார்கள். அவர்களின் கனவை நனவாக்க நீங்கள் பாடுபட வேண்டும். உங்களுக்கு சமுதாய பொறுப்பு இருக்கிறது. எளிதாக தட்டி கழித்து விட முடியாத பொறுப்பு உள்ளது. உங்களை வளர்த்துவிட்ட நிறுவனத்திற்கும், உங்கள் மாநிலத்திற்கும், தேசத்திற்கும் உங்கள் பங்களிப்பு இருக்க வேண்டும். நமது குறிக்கோள் கல்வியை நல்ல முறையில் கற்பது. பின்னர் நாம் படித்த இந்த கல்வியை கொண்டு, நாட்டிற்கு நல்லது செய்வதாகும். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.