எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களை தகர்க்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க பாகிஸ்தான் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், எந்த நாடும் பாகிஸ்தனை கண்டு கொள்ளவே இல்லை. எனவே, இந்தியாவில் பெரிய அளவில் பயங்கரவாதிகள் மூலம் தாக்குதல் நடத்தி உலகத்தின் கவனத்தை ஈர்க்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இதற்காக பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. ஏராளமான பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ செய்து தாக்குதல் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருகிறது. தற்போது இந்தியாவுக்கு எதிராக ஜெய்ஸ் - இ - முகமது, லஸ்கர் - இ - தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் ஆகிய பயங்கரவாத இயக்கங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அவர்களை தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ. தயார்படுத்தி இருக்கிறது. அதில், முதல் கட்டமாக ஜெய்ஸ் - இ - முகமது இயக்க பயங்கரவாதிகளை தாக்குதலுக்கு அனுப்பி இருக்கிறது.
இந்த படையில் புதிதாக ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் பஸ்தூன் பழங்குடி பயங்கரவாதிகள் ஆகியோரை சேர்த்துள்ளனர். ஏற்கனவே பயங்கரவாத இயக்கங்களில் இருக்கும் பயங்கரவாதிகளை விட ஆப்கானிஸ்தான் மற்றும் பஸ்தூன் பயங்கரவாதிகள் அதிக பயிற்சி பெற்றவர்கள். பாதுகாப்பு படையினருடன் நேரடியாக கடுமையாக சண்டையிடும் திறன் பெற்றவர்கள். எனவே, அந்த பயங்கரவாதிகளை இப்போது இந்தியாவுக்குள் ஊடுருவ செய்ய முயற்சித்து வருகிறார்கள். அந்த படையை சேர்ந்த 100 பயங்கரவாதிகள் காஷ்மீர் எல்லையில் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை பகுதி, பகுதியாக காஷ்மீருக்குள் ஊடுருவ செய்வதற்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அவர்களில் 15 பேர் ஒரு அணியாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய காத்து இருக்கிறார்கள். அவர்கள் தற்போது லீபா பள்ளத்தாக்கில் பதுங்கி உள்ளனர். மேலும் கெரன், பூஞ்ச் பகுதி வழியாக ஊடுருவ செய்வதற்கும் பயங்கரவாதிகள் தயாராக உள்ளனர்.
பொதுவாக பயங்கரவாதிகளை ஊடுருவ செய்வதற்காக காஷ்மீர் எல்லையில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய படைகள் மீது தாக்குதல் நடத்துவது வழக்கம். ஒரு பக்கம் தாக்குதல் நடத்தி இந்திய படைகளின் கவனத்தை திசை திருப்பி விட்டு மற்றொரு பகுதி வழியாக பயங்கரவாதிகளை ஊடுருவ செய்வார்கள். அது போன்ற முயற்சி தற்போது நடந்து வருகிறது. எல்லையில் இதுவரை தாக்குதல் நடக்காத பகுதிகளில் எல்லாம் புதிதாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை நடத்துகிறது. அந்த நேரத்தை பயன்படுத்தி பயங்கரவாதிகளை ஊடுருவ செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். பாகிஸ்தான் ராணுவத்தின் தந்திரத்தை தெரிந்து வைத்துள்ள இந்திய ராணுவம் உஷாருடன் கண்காணித்து வருகிறது.
காஷ்மீரில் மட்டும் அல்லாமல் டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களை பயங்கரவாதிகள் மூலம் தகர்ப்பது பாகிஸ்தானின் திட்டமாகும். காஷ்மீருக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகள் அங்கிருந்து முக்கிய நகரங்களுக்குள் செல்ல திட்டமிட்டு இருக்கிறார்கள். அவ்வாறு ஊடுருவியதற்கு பிறகு பெரும் தாக்குதலை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, முக்கிய நகரங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளை எவ்வாறு ஊடுருவ செய்வது, இந்தியாவில் எங்கெங்கு தாக்குதல் நடத்த வேண்டும் என்பது குறித்து ஜெய்ஸ்-இ- முகமது பயங்கரவாதிகள் விரிவாக ஆலோசனை நடத்தி உள்ளனர். இந்த இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரின் தம்பி முக்தி ரவூப் அஸ்கார் தான் தற்போது இயக்கத்தை முன்னின்று நடத்தி வருகிறான். அவன் கடந்த 19-ம்தேதியும், 20-ம் தேதியும் பகவல் பூரில் பயங்கரவாதிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தி உள்ளான். அப்போது தாக்குதல் திட்டங்களை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. வகுத்து கொடுத்தது. அதன் அடிப்படையில் தாக்குதல்கள் எப்படி நடைபெற வேண்டும் என்று வியூகங்களை வகுத்துள்ளனர். இப்போது இந்தியாவில் நடத்த திட்டமிட்டுள்ள தாக்குதல் தவிர மேலும் பல தாக்குதல்களை நடத்த வேண்டும் என்பது பயங்கரவாதிகளின் திட்டமாகும். இதற்காக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புதிதாக ஆள் எடுக்கும் பணியையும் பயங்கரவாதிகள் செய்து வருகிறார்கள். ஏராளமான இளைஞர்கள் அந்த இயக்கத்தில் புதிதாக சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு பயிற்சி கொடுத்து இந்தியாவுக்குள் அனுப்ப இருக்கிறார்கள். பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை துல்லியமாக கண்காணித்து வரும் இந்திய உளவு படைகள் எதிர் நடவடிக்கைகளுக்கு தயாராக உள்ளது. காஷ்மீர் முழுவதும் விழிப்புடன் கண்காணித்து வருகிறார்கள். முக்கிய நகரங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளதால் அங்கும் போலீசார் தீவிர கண்காணிப்புகளை செய்து வருகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.