முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தை 26-ம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை

வெள்ளிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

ஐ.என்.எஸ். மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.

ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை தவிர்க்க, முன்ஜாமீன் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை டெல்லி ஐகோர்ட் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, டெல்லி ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக ப. சிதம்பரம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை திங்கட்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

மேலும், அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ப.சிதம்பரத்திற்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கினர். அதாவது, 26-ம் தேதி (திங்கட்கிழமை) வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை விதித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து