எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி : உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாதுகாப்பு துறை அமைச்சரும், பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான அருண் ஜெட்லி நேற்று நண்பகல் 12 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 66. அருண்ஜெட்லி மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். சுஷ்மா ஸ்வராஜ், அருண்ஜெட்லி ஆகியோரது அடுத்தடுத்த மறைவு பாரதீய ஜனதா கட்சிக்கு மிகப் பெரும் இழப்பாகவே கருதப்படுகிறது.
தீவிர சிகிச்சை
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நண்பகல் 12 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. முன்னதாக கடந்த 9-ம் தேதியன்று அவருக்கு மிக கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சோர்வான நிலையில் அவர் தளர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் பிரச்சனைக்காக அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மறுநாளே மோசமான நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து
அவருக்கு உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு மூத்த மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே கடந்த வாரம் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று அருண் ஜெட்லியின் உடல் நலம் குறித்து விசாரித்து சென்றனர்.
காலமானார்
இந்த நிலையில் அருண் ஜேட்லி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானதாக தெரிவிக்கப்பட்டது. அருண் ஜெட்லிக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இதற்கிடையே தனது வெளிநாட்டு பயணத்தை நிறைவு செய்த பிறகு பிரதமர் மோடி, அருண் ஜெட்லியை காண எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்வார் என தகவல் வெளியாகி இருந்த நிலையில் அருண் ஜெட்லி நேற்று நண்பகலில் காலமானார்.
பா.ஜ.க. மூத்த தலைவரான ஜெட்லி மத்திய நிதி அமைச்சராக பதவி வகித்தவர். நிதி அமைச்சராக இருந்த போது ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்தியவர் இவரே. 66 வயதான அருண் ஜெட்லி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசிலும், நரேந்திர மோடி அரசிலும் அமைச்சராக இருந்தவர். வாஜ்பாய் ஆட்சியில் தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராக பதவி வகித்துள்ளார். பா.ஜ.க.வின் குழுத் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார். நிதித்துறை, பாதுகாப்புத்துறை, சட்டத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். இவர் உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.
வாழ்க்கை வரலாறு
டெல்லியில் கல்லூரி மாணவராக இருந்த போது அரசியலில் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டவர் இவர். 1975 -77ல் நாட்டில் அவரச நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது அருண் ஜெட்லி கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையில் இருந்தார். 2009 - 2014-ம் ஆண்டுகள் வரை மாநிலங்களைவை எதிர்க்கட்சித் தலைவராக அருண் ஜெட்லி இருந்தார். தீவிர கிரிக்கெட் ரசிகரான இவர் டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராகவும் பதவி வகித்தவர்.
இருபெரும் தலைவர்கள் ..
இவரது மறைவு குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அருண் ஜெட்லியின் துயரமான மறைவை ஆழ்ந்த இரங்கலுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது. மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, தனது உடல் நலக்குறைவு காரணமாக நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே போல வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜூம் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை. இருவருமே நரேந்திர மோடியின் 2-வது அரசில் அமைச்சர்களாக பதவி வகிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. சில தினங்களுக்கு முன்புதான் சுஷ்மா ஸ்வராஜ் காலமானார். அவரது மறைவால் பாரதீய ஜனதா கட்சி பெரும் அதிர்ச்சியை சந்தித்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் பாரதீய ஜனதா கட்சிக்கு தற்போது மற்றும் ஒரு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி ஆகிய இரு பெரும் தலைவர்களின் அடுத்தடுத்த மறைவு பாரதீய ஜனதா கட்சிக்கு மிகப் பெரும் இழப்பாகவே கருதப்படுகிறது.
பிரதமர் வேதனை
மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜெட்லி கடந்த ஆண்டு மே மாதம் 14-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு அவரால் தனது பணியை கவனிக்க முடியவில்லை. இதையடுத்து ரயில்வே அமைச்சராக இருந்த பியூஷ் கோயல் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டு பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி இது குறித்து கூறுகையில், விலைமதிப்பற்ற ஒரு நண்பரை இழந்து விட்டேன் என்று வேதனையோடு கூறியுள்ளார். இதே போல் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், நிதின் கட்காரி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் அருண்ஜெட்லியின் மறைவால் தங்களது வேதனையை வெளிப்படுத்தி உள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர்களும் கூட தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். அருண் ஜெட்லிக்கு சங்கீதா என்ற மனைவியும், ரோஹன் என்ற மகனும், சோனாலி என்ற மகளும் உள்ளனர். அருண் ஜெட்லி மறைவு குறித்து கேள்விப்பட்ட பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜெட்லி குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார். மத்திய அமைச்சரவையில் ஒரு மிகப் பெரும் திறமைசாலியாக கருதப்பட்டவர் அருண்ஜெட்லி. அவரது மறைவு பாரதீய ஜனதா கட்சிக்கு ஒரு மிகப் பெரிய இழப்பு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.